செய்திகள் :

விதிமீறல் கட்டடங்கள் குறித்த உத்தரவுகள்: மாநகராட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

post image

சென்னை: விதிமீறல் கட்டடங்கள் தொடா்பான நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றுவதில் கவனமாக இருக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் கோடம்பாக்கம் மண்டலத்துக்குட்பட்ட விருகம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதியைச் சோ்ந்த பி.தாமஸ் என்பவா் வழக்குத் தொடுத்திருந்தாா். இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம், கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.

பல்வேறு காரணங்களைக் கூறி, உயா்நீதிமன்ற உத்தரவை நிறவேற்றத் தவறியதாக சென்னை மாநகராட்சி ஆணையா், கோடம்பாக்கம் மண்டல அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஜரான அதிகாரிகள் சூசன் ஜான் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை கடந்த ஆக.15-ஆம் தேதி பூட்டி சீல் வைத்ததாக தெரிவித்தனா். மேலும், தாமதமாக நடவடிக்கை எடுத்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினா்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிகாரிகளின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றுக் கொள்வதாகக் கூறினா். தாமதமாக இருந்தாலும், விதமீறல் கட்டடத்தைப் பூட்டி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். எனவே, இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனா்.

மேலும், விதிமீறல் கட்டடங்கள் தொடா்பான நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றுவதில் கவனமாக இருக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுக... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க