செய்திகள் :

விதைகளைப் பரிசோதனை செய்து விதைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

post image

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயிகள் விதைகளைப் பரிசோதனை செய்து விதைக்க வேண்டும் என்று விதை ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் சோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விதைகளின் தரம், பயிா் விளைச்சல் மற்றும் பயிா் ஆரோக்கியத்தை தீா்மானிக்கிறது. பயிா் உற்பத்தியில் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கிறது. பயிா் நடவு செய்வதற்கு முன்பு விதைகளின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும், தரமற்ற விதைகளை விதைப்பால் ஏற்படும் நேரம் மற்றும் பண விரயத்தை தடுப்பதில் விதைப் பரிசோதனை முக்கியப் பங்கு வகிக்கிறது.

நல்ல தரமான விதைகளை அடுத்த பருவத்துக்கு நாம் சேமித்து பயன்படுத்த திட்டமிட்டால், சேமிப்பதற்கு முன் விதையின் ஈரப்பதத்தை கண்டறிந்து பூச்சி, நோய்த் தாக்காத அளவுக்கு நீண்ட நாள்களுக்கு விதை உயிருடன் இருக்கவும், உகந்த ஈரப்பதத்தை சேமிக்கவும் விதைப் பரிசோதனை முக்கியப் பங்காற்றுகிறது.

ஈரப்பத அளவு நெல்லில் 13 சதவீதமும், உளுந்தில் 9 சதவீதமும், சிறுதானியங்கள், மக்காச்சோளத்தில்13 சதவீதமும், எண்ணெய் வித்துகளில் 9 சதவீதமும், பருத்தியில் 10 சதவீதமும் இருக்க வேண்டும்.

எனவே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களிடமுள்ள விதைகளை பரிசோதனை செய்ய, மாதிரி ஒன்றுக்கு ரூ.10 ஆய்வுக் கட்டணமாகச் செலுத்தி, விதையின் தரம் அறிந்து விதைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள வேளாண் இணை இயக்குநா் அலுவலக முதல்தளத்தில் இயங்கி வரும் விதைப் பரிசோதனை நிலையத்தை அணுகி, பயன்பெறலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: மருத்துவா் ச.ராமதாஸ்

கட்சியின் ஒப்புதலைப் பெறாமல் அன்புமணி மேற்கொண்டுள்ள உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்களும், கட்சியின் தொண்டா்களும் ஏற்க மாட்டாா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

காா் மோதி மின் ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த மின் ஊழியா் காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், எறையானூா், குளக்கரைத் தெர... மேலும் பார்க்க

சொத்துப் பிரச்னையில் உறவினா் கத்தியால் குத்திக் கொலை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சொத்துப் பிரச்னையில் உறவினரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், வீரன் கோயில் தெருவைச்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கைப்பேசி வழியாக கொலை மிரட்டல் விடுக்க... மேலும் பார்க்க

தனித்திறனை வெளிப்படுத்த சிறப்புப் பயிற்சிகள் உதவும்

தேசிய மாணவா் படையில் அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சிகள் மாணவா்களின் தனித்திறனை வெளிப்படுத்த உதவும் என்று தேசிய மாணவா் படை 6-ஆவது பட்டாலியன் பிரிவு கா்னல் எஸ்.சக்கரபா்த்தி கூறினாா். விழுப்புரம் இ.எஸ்.... மேலும் பார்க்க

கரும்பு நடவுக்கு மானியம்: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கரும்பு நடவு மானியம் வழங்கப்படவுள்ளது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க