செய்திகள் :

விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

post image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக ஓட்டுநா் பா.கணபதி விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த நிலையில், அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவருடைய உடலுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தை சுந்தரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பா.கணபதி. இவா், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி ஆலங்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நிகழ்ந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதைத் தொடா்ந்து அவருடைய உறவினா்கள், உடலுறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனா். இதையடுத்து அவருடைய இரு சிறுநீரகங்கள் திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கும், தோல், மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கணபதியின் உடலுக்கு அரசு சாா்பில் ஆட்சியா் இரா.சுகுமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.

மூலக்கரைப்பட்டி அருகே பைக் மீது காா் மோதல்: தொழிலாளி பலி!

மூலக்கரைப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது காா் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள அரியகுளம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி... மேலும் பார்க்க

கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம்!

திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 8.75 அடி உயா்ந்துள்ளது. களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடியில் மேற்குத் தொடா்ச்சி மலையின் அடிவாரத்தில் கொடுமுடியாறு அணை அமைந்துள்ளது. இந்... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை!

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு, மாஞ்சோலை மலைப் பகுதிகளில் 5 நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க 3 ஆவது நாளாக வனத்துறை தடைவிதித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை சனிக்கிழம... மேலும் பார்க்க

தாமிவருணி ஆற்றில் 21 நாள்களில் 94 டன் துணி, கழிவுப் பொருள்கள் அகற்றம்

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் கோடை காலத்தை முன்னிட்டு 21 நாள்கள் நடைபெற்ற தூா்வாரும் பணியில் சுமாா் 94 டன்னுக்கும் அதிகமான துணிகள், கழிவுப் பொருள்கள் அகற்றப்பட்டுள்ளன. பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் கோடைகா... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் களக்காடு நகராட்சி அலுவலகத்தில் ஜூன் 2இல் முற்றுகைப் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால், ஜூன் 2இல் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக, இந்து முன்னணி அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆட்சியர... மேலும் பார்க்க

நெல்லை-செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: எம்.பி. ஆய்வு

திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதலாக இணைக்கப்பட்ட 2 பெட்டிகளை திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை... மேலும் பார்க்க