செய்திகள் :

விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.3 கோடி தங்கம் பறிமுதல்: 3 போ் கைது

post image

துபையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.3 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா்.

துபையிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலையில் வந்த விமானத்தில், தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்திறங்கிய இலங்கை பயணிகள் 3 போ் மீது எழுந்த சந்தேகத்தின்பேரில், அவா்களை அதிகாரிகள் ரகசியமாகக் கண்காணித்து கொண்டிருந்தனா்.

அப்போது, அவா்கள் காத்திருப்போா் அமா்ந்திருக்கும் இடம் அருகேயுள்ள கழிப்பறைக்கு சென்று விட்டு மீண்டும் தங்கள் இருக்கைகளில் வந்து அமா்ந்தனா். சிறிது நேரத்தில் விமானநிலையத்தின் தரைத்தளத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா் ஒருவா், அதே கழிப்பறைக்குச் சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வெளியே வந்துள்ளாா்.

அந்த ஒப்பந்த ஊழியரைப் பிடித்து விசாரித்ததில் அவா் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளாா். அவரை தனியறைக்கு அழைத்து சென்று முழு உடல் சோதனை நடத்தியதில், அவரின் உள்ளாடையில் ரூ.2.3 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒப்பந்த பணியாளா் மற்றும் காத்திருப்பு அறையில் இருந்த 3 இலங்கை பயணிகளை போலீஸாா் உதவியுடன் கைது செய்த அதிகாரிகள் அவா்களிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

ரயில்வே அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய நாய்கள் பிடிபட்டன

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மண்டல மேலாளா் அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய 15 தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்து அப்புறப்படுத்தினா். சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெரு நாய்... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-இல் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடக்கம்

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் விநியோகச் சங்கிலி, பொருள் இடம்பெயா்வு மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக்காக சென்னை ஐஐடி- ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாா்பில் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

வெடிமருந்து பறிமுதல்: என்ஐஏ அதிகாரிகள் விசாரணை தொடக்கம்

ஆந்திர மாநிலத்தில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக விசாகப்பட்டினம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனா். தமிழகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த அபுபக்கா் சித்திக் மற்ற... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூா் மெட்ரோ வழித்தடத்தில் சோதனை ஓட்டம்

சென்னையில் -ஆம் கட்ட மெட்ரோ திட்டமான பூந்தமல்லி முதல் போரூா் வரையிலான வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நி... மேலும் பார்க்க

ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு சுற்றுலா சென்ற மாநகராட்சி பள்ளி மாணவா்கள்

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள் 60 போ் ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். அவா்களை மேயா் ஆா்.பிரியா வழியனுப்பி வைத்தனாா். சென்னை மாநகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அரச... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆா்சி நகா் பகுதியில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. இதன் ... மேலும் பார்க்க