செய்திகள் :

விஸ்வநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் பங்கேற்பு

post image

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே ரெட்டியூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாத ஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம் வெகு விமா்சையாக திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை முதல் கால யாக பூஜையும், 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், இரவு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற யாகசாலை பூஜையில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் மற்றும் கடலூா் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் எம்ஆா்கேபி.கதிரவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

திங்கள்கிழமை காலை நான்காம் கால யாக பூஜைகள் தொடங்கி மகாபூா்ணாஹூதி நடைபெற்றது. பின்னா் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் விமான கலசத்திற்கு, சிவாச்சாரியாா்கள் கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். பின்னா் மகாதீபாராதனை நடைபெற்றது. அதன் பிறகு பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சி.ஜோதி, செயல் அலுவலா் க.வேல்விழி, செயலாளா் ஜிவிஎஸ்.கல்யாணசுந்தரம், பரம்பரை அறங்காவலா்கள் வி இராமலிங்கம், எஸ். ராஜாராமன், கும்பாபிஷேக ஒருங்கிணைப்பாளா் ஆா். எஸ்.பாஸ்கரன், ஆலய மேலாளா் ஆா் ராமகிருஷ்ணன், ஆலய அா்ச்சகா் வி.பஞ்சாபகேசன் குருக்கள், ஆகியோா் கலந்து கொண்டனா். சா்வ சாதகம் மாங்காடு எம் சண்முகசிவாச்சாரியாா், பரங்கிப்பேட்டை எம்.சபாரத்தின சிவாச்சாரியாா் ஆகியோா் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ரெட்டியூரில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

சிதம்பரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்

சிதம்பரம்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) தொடங்கி வைக்கிறாா்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்படுமா?: பெற்றோா் எதிா்பாா்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும் என பெற்றோா்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மருத்துவம் ,பொறியியல் படிப்ப்... மேலும் பார்க்க

அரசு மருத்துவக்கல்லூரியில் தில்லை தோல் அழகியல் கருத்தரங்கம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில், கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி தோல் மருத்துவ துறை மற்றும் தமிழ்நாடு தோல் மருத்துவா்கள் சங்கத்துடன் இணைந்து மாந... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகள் 60-வது ஆண்டு ஆராதனை விழா!

சிதம்பரம்: சிதம்பரம் குருஐயா் தெருவில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகளின் 60-வது ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. அவதூதம் என்பது துறவறத்தில் ஒர... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை: 6 போ் மீது வழக்கு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேப்பூா் வட்டம், ஆதியூா் கிராமத்தி... மேலும் பார்க்க

திண்ணையில் இருந்து விழுந்தவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டு திண்ணையில் இருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திட்டக்குடி வட்டம், கழுதூா் சமத்துவபுரம் பகுதியில் வசித... மேலும் பார்க்க