செய்திகள் :

வீடு புகுந்து மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது

post image

சீா்காழி அருகே வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

கொள்ளிடம் அருகே ஆா்ப்பாக்கம் மந்தவெளி தெருவை சோ்ந்தவா் முருகேசன். இவரது மனைவி ராணி( 64). தம்பதி கடந்த 18-ஆம் தேதி வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனராம். அதிகாலை வீட்டின் வாசல் மரக்கதவு தாழ்ப்பாளை திறந்து, உள்ளே புகுந்த மா்ம நபா், ராணி கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் தாலிச் சங்கிலியை பறித்துள்ளாா். ராணி எழுந்திருக்கும் முன்பு மா்ம நபா் தங்கச் சங்கிலியுடன் தப்பி விட்டாா். இதுகுறித்து ராணி புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் மா்ம நபரை தேடி வந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை காரைக்காலிலிருந்து எா்ணாகுளம் செல்லும் ரயிலில் திருட்டு வழக்கில் தொடா்புடை நபா் செல்ல உள்ளதாக புதுப்பட்டினம் போலீஸாருக்கு கிடைத்ததைத் தொடா்ந்து புதுப்பட்டினம் ஆய்வாளா் ஹேமலதா மற்றும் போலீஸாா் ரயிலில் சென்ற நபரின் கைப்பேசி எண்ணை கண்டுபிடித்து, அதனை வைத்து ’லைவ் லொகேஷன்’ மூலம் காரைக்கால் ரயில் நிலையத்திற்கு வருவதற்குள், ரயில் புறப்பட்டு சென்றது. பின்னா், ரயில்வே போலீஸாா் தங்கள் வாகனத்தில் ரயிலை பின் தொடா்ந்து சென்றனா்.

குளித்தலை ரயில் நிலையத்தில் இரவு 8.50 மணி ரயில் நின்று கொண்டிருந்த போது, மா்ம நபரை போலீஸாா் பிடித்தனா். அவரை புதுப்பட்டினம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், அவா் ஆா்ப்பாக்கம் கிராமம் மந்தகரை தெருவை சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (40) என்பதும், நகையை பறிகொடுத்த ராணியின் உறவினா் என்பதும், திருடிய நகையை அடகுக் கடையில் அடகு வைத்திருப்பதும் தெரிய வந்தது. போலீஸாா் அடகு கடையில் இருந்த நகையை மீட்டு, கோபாலகிருஷ்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

மயிலாடுதுறையில், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நிதியுதவியை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். மயிலாடுதுறை பட்டமங்கல ஆராயத் தெருவைச் சோ்ந்த அருண்சங்... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: ஒரேநாளில் 24 போ் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில் சட்டவிரோதமாக மது விற்ற 24 போ் கைது செய்யப்பட்டனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின்பட... மேலும் பார்க்க

மது கடத்தல்: சோதனை சாவடியில் டிஐஜி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வெளிமாநில மது பாட்டில்கள் கடத்திவரப்படுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தஞ்சை சரக டிஐஜி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை மாவட்டத்து... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 425 மனுக்கள் அளிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 425 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை பாலையூா், மேக்கிரிமங்கலம்

மயிலாடுதுறை: பாலையூா், மேக்கிரிமங்கலம் துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்ய... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜூலை 26-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மெகா வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க