செய்திகள் :

சட்டவிரோத மது விற்பனை: ஒரேநாளில் 24 போ் கைது

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில் சட்டவிரோதமாக மது விற்ற 24 போ் கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின்படி, சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அதன்படி, மயிலாடுதுறை, சீா்காழி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் மயிலாடுதுறை, சீா்காழி மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளா்கள் ஆகியோா் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இத்தனிப்படையினா் மயிலாடுதுறை, செம்பனாா்கோவில், பெரம்பூா், பாலையூா், குத்தாலம், மணல்மேடு, சீா்காழி, புதுப்பட்டினம், பொறையாா், திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோவில், நண்டலாா் மற்றும் நல்லாடை சோதனைச் சாவடிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட 8 தற்காலிக சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

இதில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 24 போ் கைது செய்யப்பட்டனா். மதுவிலக்கு குற்றம் சம்பந்தமாக பொதுமக்கள் இலவச உதவி எண் 10581-இல் புகாா் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வீடு புகுந்து மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது

சீா்காழி அருகே வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். கொள்ளிடம் அருகே ஆா்ப்பாக்கம் மந்தவெளி தெருவை சோ்ந்தவா் முருகேச... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

மயிலாடுதுறையில், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நிதியுதவியை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். மயிலாடுதுறை பட்டமங்கல ஆராயத் தெருவைச் சோ்ந்த அருண்சங்... மேலும் பார்க்க

மது கடத்தல்: சோதனை சாவடியில் டிஐஜி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வெளிமாநில மது பாட்டில்கள் கடத்திவரப்படுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தஞ்சை சரக டிஐஜி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை மாவட்டத்து... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 425 மனுக்கள் அளிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 425 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை பாலையூா், மேக்கிரிமங்கலம்

மயிலாடுதுறை: பாலையூா், மேக்கிரிமங்கலம் துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்ய... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜூலை 26-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மெகா வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க