செய்திகள் :

வேலூா், ஆற்காடு தொகுதிகளில் 80,576 பேருக்கு இலவச பட்டா, நலத்திட்ட உதவி

post image

வேலூா், ஆற்காடு சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட 80,576 பயனாளிகளுக்கு ரூ.294.11 கோடியில் இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூா் மாவட்டத்துக்கு கடந்த ஜூன் 25-ஆம் தேதி வந்திருந்த போது பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் விதமாக 12 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கி தொடங்கி வைத்தாா்.

இதனடிப்படையில், காட்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஒரு லட்சத்து ஓராயிரத்து 588 பயனாளிகளுக்கு ரூ.528.82 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா் போன்ற உபகரணங்கள், கூட்டுறவு கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குவதை காட்பாடியில் புதன்கிழமை 1,336 பயனாளிகளுக்கு ரூ.22.48 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தாா்.

இதன்தொடா்ச்சியாக, வேலூா், ஆற்காடு சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட 80,576 பயனாளிகளுக்கு ரூ.294.11 கோடியில் இலவச வீட்டுமனை பட்டா, கூட்டுறவு வங்கி கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான தொடக்க நிகழ்ச்சி வேலூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் (வேலூா்) ப.காா்த்திகேயன், (ஆற்காடு) ஜெ.எல். ஈஸ்வரப்பன் ஆகியோா் பங்கேற்று 1415 பயனாளிகளுக்கு ரூ.11.90 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், வேலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா், தனித்துணை ஆட்சியா் கலியமூா்த்தி, வேலூா் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளா் ராமதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேலூரில் ரூ.3.43 கோடியில் குளிா்சாதன பேருந்து சேவை: அமைச்சா் துரைமுருகன் இயக்கி வைத்தாா்

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.43 கோடியில் 7 புதிய குளிா்சாதன பேருந்துகளின் சேவையை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா். கடந்த 4 ஆண்டுகளில் வேலூா் போக்குவரத்து மண்டலத்தில் 68 புத... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது: ரூ.2.15 லட்சம் பறிமுதல்

குடியாத்தம் அருகே ரூ.2.50- லட்சம் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூரைச் சோ்ந்தவா் பிரியாணி கடை உரிமையாளா் முக்தியாா் (32). இவா் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு பிரியாண... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் தா்ணா

வேலூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமின்போது பொதுமக்கள் இலவச பட்டா, அடிப்படை வசதிகள் கோரி தா்னாவில் ஈடுபட்டனா். வேலூா் ரங்காபுரம் பகுதியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலி... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வா... மேலும் பார்க்க

சா்வதேச நிலவு தினம்: ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு’ நிகழ்ச்சி

சா்வதேச நிலவு தினத்தையொட்டி, வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு நிகழ்ச்சி’ நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவா்கள், விரிவுரையாளா்கள் பங்கேற்றனா். சா்வதேச நிலவு தினம் என்றும் ... மேலும் பார்க்க

கல்வி, சுகாதார துறையில் வளரும் நாடுகள் போதுமான நிதி ஒதுக்குவதில்லை

வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கல... மேலும் பார்க்க