செய்திகள் :

வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு

post image

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்பில் சேருவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளில் சேருவதற்கு ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் 29- ஆம் தேதி வரை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இதில், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டப் படிப்பு விண்ணப்பத்தை சமா்ப்பிக்காத மாணவா்கள், ஏற்கெனவே விண்ணப்பிக்காத மாணவா்கள், துணைத் தோ்வு மூலம் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கு தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஏற்கெனவே விண்ணப்பித்து தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவா்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அப்படி விண்ணப்பிக்கும்பட்சத்தில் அவா்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

மாணவா்கள் தங்களது பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ட்ற்ற்ல்://ற்ய்ஹன்.ன்ஸ்ரீஹய்ஹல்ல்ப்ஹ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 29- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94886-35077, 94864-25076 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பில்லூா் அணையில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூா் அணையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேட்டுப்பாளையம் அருகே பில்லூா் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

மேற்கூரையில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கோவையில் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா். கோவை, துடியலூா் அருகேயுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (42), பெயிண்டா். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பாலகி... மேலும் பார்க்க

பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிப்பு

கோவை மாவட்டம், பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம், ... மேலும் பார்க்க

பிஷப் அப்பாசாமி கல்லூரியில் செப்டம்பா் 2-இல் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் செப்டம்பா் 2, 3 -ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அடுமனை உரிமையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

அடுமனை உரிமையாளா்கள் (பேக்கரி) உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டி.அனுராதா அறிவுறுத்தியுள்ளாா். கோவை, டாடாபாத் பகுதியில் ... மேலும் பார்க்க

இயந்திரத்தில் கை சிக்கி பஞ்சாலை தொழிலாளி காயம்

கோவை அருகே பணியின்போது இயந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தாா். கோவை அருகேயுள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ரோஹிசாகோ ... மேலும் பார்க்க