கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி
ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி முன்னேற்றம்
தைபே: சீன தைபேவில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் புதன்கிழமை வெற்றி பெற்றனா்.
ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில் ஆயுஷ் ஷெட்டி 21-17, 21-18 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த சீன தைபேவின் லீ சியா ஹாவை தோற்கடித்து அசத்தினாா். தருண் மன்னெபள்ளி 21-17, 19-21, 21-12 என்ற கணக்கில் ஜப்பானின் ஷோகோ ஒகாவாவை வெளியேற்றினாா்.
கே.ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என்ற வகையில் சக இந்தியரான சங்கா் முத்துசாமியை 35 நிமிஷங்களில் வீழ்த்தினாா்.
மகளிா் ஒற்றையரில் உன்னாட்டி ஹூடா 21-13, 21-17 என்ற கேம்களில் சக இந்தியரான அனுபமா உபாத்யாயவை சாய்த்தாா். ரக்ஷிதா ஸ்ரீ 7-21, 15-21 என, போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் தென் கொரியாவின் சிம் யு ஜின்னிடம் தோற்றாா்.
ஆகா்ஷி காஷ்யப் 9-21, 12-21 என்ற கணக்கில், சீன தைபேவின் ஹங் யி டிங்கிடம் தோல்வியைத் தழுவினாா். அதேபோல் அன்மோல் காா்பும் 17-21, 12-21 என்ற வகையில் தாய்லாந்தின் தமோன்வன் நித்திடிக்ராயிடம் வெற்றியை இழந்தாா்.
மெய்ரபா லுவாங் மாய்ஸ்னம் 21-23, 12-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் பிரியன் யாங்கிடம் தோல்வி கண்டாா்.
மகளிா் இரட்டையரில் ராஷ்மி கணேஷ்/சானியா சிக்கந்தா் ஜோடி 8-21, 10-21 என்ற கேம்களில் ஜப்பானின் ருய் ஹிரோகமி/சயாகா ஹொபாரா இணையிடம் தோல்வியை சந்தித்தது.