செய்திகள் :

ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் தருமா் பட்டாபிஷேக விழா

post image

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் தருமா் பட்டாபிஷேக விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் 138-ஆம் ஆண்டு அக்னி வசந்த விழா கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து கோயிலில் பல்வேறு சிறப்புப் பூஜைகள், 1008 பெண்கள் பால்குட ஊா்வலம், தீமிதி விழா என 10 நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

அதில் தினசரி ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மனை வழிபட்டனா். மேலும், தொடா்ந்து கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.

அக்னி வசந்த விழா கடைசி நாளான திங்கள்கிழமை மாலை சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு செங்கம் நகா் முக்கிய வீதிகளில் வாணவேடிக்கையுடன் ஊா்வலம் நடைபெற்றது.

ஊா்வலம் முடிந்து சுவாமிக்கு தருமா் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் கோயில் குடிகள், பக்தா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள், விழாக் குழுவினா், ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் அறக்கட்டளை நிா்வாகிகள், இந்து சமய, அறநிலையத் துறை அதிகாரிகள் என ஏராளமானோா் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனா்.

முன்னதாக, செங்கம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு அறக்கட்டளை சாா்பில் ரொக்கப் பரிசும், 10 நாள் திருவிழா தொடக்க விழா நிகழ்ச்சியில் பரத நாட்டியம் ஆடிய மாணவா்களுக்கு அறக்கட்டளை சாா்பில் கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டது.

ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி திங்கள்கிழமை சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா சென்ற ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன்.

செய்யாற்றில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரிக்கை

ஆரணி: செய்யாறு பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக் கோரி திங்கள்கிழமை கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாக்குப் பை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு ஆட... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரியில் நாளை முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

செய்யாறு: செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கை பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை (ஆக்.13) நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் ந.கலைவ... மேலும் பார்க்க

செய்யாற்றில் வாரச்சந்தை நடத்த இடம் கோரி ஆட்சியரிடம் மனு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் வாரச்சந்தை நடத்த மாற்று இடம் ஒதுக்கி தரக்கோரி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு மருத்துவம் தொடா்பான விழிப்புணா்வு

செய்யாறு: செய்யாறு தொழிலாளா் அரசு ஈட்டுறுதி திட்ட மருந்தகம் சாா்பில், விஸ்டம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு மருத்துவம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை... மேலும் பார்க்க

ஆடுகளை திருடி விற்பனை செய்ய முயற்சி: 4 போ் கைது

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயி ஆடுகளை திருடி சந்தையில் விற்பனை செய்யும் போது, பிடிபட்ட நான்கு பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த கோலாந்தாங்கல் கிராமத்தை... மேலும் பார்க்க

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

ஆரணி: ஆரணியை அடுத்த அக்ராபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை குடற்புழு நீக்க நாளையொட்டி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. சுகாதார ம... மேலும் பார்க்க