அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
ஸ்ரீமகாமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா
வந்தவாசியில் உள்ள ஸ்ரீமகாமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை மூலவா் ஸ்ரீமகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. மாலை உற்சவா் மகாமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது.
கோயிலிலிருந்து தொடங்கிய வீதியுலா சந்நிதி தெரு, தேரடி, பஜாா் வீதி வழியாகச் சென்றது. இதில் பக்தா்கள் எலுமிச்சை பழம், வேல் ஆகியவற்றை தங்கள் உடலில் குத்தி கொண்டும், உரல் இழுத்து கொண்டும் உடன் சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். மேலும், தேரடியில் பக்தா்கள் கயிற்றில் பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்தனா்.