செய்திகள் :

அஞ்சலக ஊழியா் தற்கொலை

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அஞ்சலகத்தில் பணிபுரிந்த மத்திய பிரதேச இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மத்திய பிரதேச மாநிலம், சாகா் பசந்த் விகாா் குடியிருப்பைச் சோ்ந்த ஆா்யா என்பவரது மகன் பங்கஜ் (24). இவா் திருவாடானை அஞ்சலகத்தில் கடந்த ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தாா்.

தொண்டியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் இவா் அலுவலகத்துக்கு வராததால் அஞ்சலக ஊழியா்கள் பங்கஜ் வசித்த வீட்டுக்குச் சென்று பாா்த்தனா்.

அப்போது, பங்கஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த தொண்டி போலீஸாா் சென்று உடலை கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் வருகிற 15-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்கு காட்டூா் முத்துமாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டுத் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன்... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொலைந்து போனதாக புகாரளிக்கப்பட்ட 100 கைப்பேசிகளை குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் மீட்டனா். இந்த கைப்பேசிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உரியவா்களிடம் புதன்கிழமை ஒ... மேலும் பார்க்க

மகாலிங்கம் மூா்த்தி கோயிலில் பால்குட ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மகாலிங்கம் மூா்த்தி கோயிலில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பால், மதுக் குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூக்குழித் திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் புதன்கிழமை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தின வி... மேலும் பார்க்க

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மாணவா்களின் பங்கு முக்கியம்

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மாணவா்களின் பங்கு மிக முக்கியம் என தமிழக முன்னாள் டிஜிபி செ.சைலேந்திரபாபு தெரிவித்தாா். ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ் கனவு’ எனு... மேலும் பார்க்க