செய்திகள் :

அடுத்தவர்களுக்காக வாழாதீர்கள்: குடும்பஸ்தன் நாயகி பகிர்ந்த நெகிழ்ச்சியானப் பதிவு!

post image

நடிகை சான்வி மேக்னா தனது புதிய படம் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

குடும்பஸ்தன் திரைப்படத்தின் மூலம் தமிழில் கவனம் பெற்ற நடிகை சான்வி மேக்னா தெலங்கானாவைச் சேர்ந்தவர்.

பிட்ட கதலு, புஷ்பக விமானம், பிரேம விமானம் படங்களின் மூலம் புகழ்ப்பெற்றார். இவரது நடிப்பில் சமீபத்தில் டுக் டுக் என்ற தெலுங்கு படம் வெளியானது.

சு.சுப்ரீத் கிருஷ்ணா இயக்கிய இந்தப் படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இது குறித்து நடிகை சான்வி மேக்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:

உண்மையான உணர்வுகள்! இந்தப் படத்தின் கதையைக் கேட்டபிறகும், ஸ்கிரிப்டை படித்த பிறகும் மிகவும் நெகிழ்ச்சியாக உணர்ந்தேன். எனக்கு குறைவான நேரமே இருந்தாலும், படம் அளிக்கும் சந்தோஷத்தில் பங்குபெற நினைத்தேன். டுக் டுக் மிகவும் ஸ்வீட்டான படம். இதில் பங்குபெற்றதுக்கு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.

படம் எப்படி ஓடுகிறது என்பது நடிகர்/நடிகைகளிடமோ இயக்குநர்களிடமோ இல்லை. நம்முடைய உழைப்பை மட்டுமே கொடுக்க முடியும். இந்தப் படத்தினால் எனக்கு நடனம், புதிய வட்டார மொழிபேசவும் பட்டாம்பூச்சி போன்ற ஷில்பா கதாபாத்திரத்தை புரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. அவள் தன்னுடைய கொள்கைகளில் சுதந்திரத்தில் உறுதியாக இருந்தாள். அடுத்தவர்களுக்காக வாழாதீர்கள். எறும்பு எப்படி வாழ்கிறது எனக் கேள்வி கேட்காதீர்கள்.

இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது சேறு, மழையில் நடனாமாடியதையும் அதிக நேரம் வசனத்தை பேசியதையும் சிறிய, அழகான தாக்கத்தை ஏற்படுத்தியதிற்கும் என படம் முழுவதும் மகிழ்ச்சியாகப் பயணித்தேன் என்றார்.

சபலென்கா வெற்றி; பெகுலா, பாலினிக்கு அதிா்ச்சி!

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினாா். மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்ற... மேலும் பார்க்க

மகளிா் பிரீமியா் லீக் கால்பந்து போட்டி: இறுதியில் பாா்சிலோனா!

மகளிா் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் செல்சியை வீழ்த்திய நடப்பு சாம்பியன் பாா்சிலோனா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.இந்த அணிகள் மோதிய அரையிறுதியில், கட... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஆசிய வாலிபால்: இந்தியா விலகல்!

பாகிஸ்தானில் மே மாதம் நடைபெறவுள்ள மத்திய ஆசிய வாலிபால் போட்டியிலிருந்து இந்தியா விலகியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.இஸ்லாமாபாதில் மே 28 முதல் மத்திய ... மேலும் பார்க்க

விளையாட்டுத் துளிகள்..!

சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 1-0 கோல் கணக்கில் இன்டர் காசி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, அரையிறுதியில் இடம் பிடித்தது. தில்லியில் நடைபெற்ற ஆசிய யோகாசன சாம்பியன்ஷிப்பில் இ... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில், தவிக்கும் வனவிலங்குகள் - புகைப்படங்கள்

வெயிலின் உக்கிரத்தையடுத்து மரத்தடி நிழலில் ஓய்வெடுக்கும் மான்கள்.குளத்தில் மீனைத் தேடும் நாரைகள்.பூங்காவில் இலைகளை சாப்பிட முயற்சிக்கும் மான்.பூங்காவில் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பஞ்ச ... மேலும் பார்க்க

நடுவர் மீது தாக்குதல்: மன்னிப்பு கேட்ட ரியல் மாட்ரிட் வீரர்!

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் வீரர் அன்டோனியோ ரூடிகர் தான்செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த அன்டோனியோ ரூடிகர் சிறந்த டிஃபெண்டராக அறியப்படுகிறார். தனது ஆக்... மேலும் பார்க்க