செய்திகள் :

'அடுத்து எனக்கு தான் ஸ்கெட்ச்' - வீடியோ காலில் கோவை சிறை கைதி பகீர் வாக்குமூலம்

post image

கோவை மத்திய சிறையில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் இருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் என்ற கைதி கடந்த ஜனவரி 27-ம் தேதி சிறை வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

கோவை மத்திய சிறை

அவரின் கழுத்து எலும்பு முறிந்த நிலையில், அது கொலையா.. தற்கொலையா என்று பல்வேறு சந்தேகங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தற்போது கோவை மத்திய சிறையில் மற்றொரு சர்ச்சை வெடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் என்ற நபர் இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். விக்ரம் இன்று தன் வழக்கறிஞரிடம் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அதில் அவர், “இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

கோவை சிறை கைதி வீடியோ கால்

என்னுடன் இருந்தவனை கொன்றுவிட்டார்கள். அடுத்து நான் தான். எனக்கு என்ன நடந்தாலும் கிருபாகரன், சதீஷ், பாலு, மோகன் ராம் ஆகியோர் தான் காரணம். என்னை எப்போது கொல்வார்கள். என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.” என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில்,  “பொதுவாக சிறை கைதிகள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 120 நிமிடங்கள் வீடியோ கால் பேசுவதற்கு தமிழ்நாடு அனுமதி வழங்கி உள்ளது.

கோவை மத்திய சிறை

விக்ரம் தன் வழக்கறிஞரிடம் தவறான தகவல்களை சொல்லி சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளார். சிறையில் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. தவறான தகவல்களை பரப்பியதால் விக்ரம் மற்றும் அவரது வழக்கறிஞர் மீது புகாரளித்துள்ளோம்.” என்று கூறியுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கள்ளக்குறிச்சி: `தனியார் பள்ளி கலவர வழக்கில் மாணவின் தாய் குற்றவாளி’ - குற்றப்பத்திரிகை தாக்கல்

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி, கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதையடுத்து அது தற்கொலை வழக்காக பதிவுசெய்யப்பட்டது. ஆனால... மேலும் பார்க்க

ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக்கூறி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கூரை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ராமசாமி- காசியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் என நான்கு குழந்தைகள்... மேலும் பார்க்க

`எனக்கு லீவு வேணும்..' -தர மறுத்ததால் சக ஊழியர்களைக் கத்தியால் குத்திய அரசு ஊழியர்

மேற்கு வங்கம் மாநிலத்தில், விடுப்பு அளிக்க மறுத்ததால் சக ஊழியர்கள் 4 பேரை அரசு ஊழியர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ... மேலும் பார்க்க

மோசடி வழக்கு: ``10-ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும்" -நடிகர் சோனு சூட்க்கு எதிராக கைது வாரண்ட்!

பஞ்சாப் மாநிலம் லுதியானாவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா. இவர் லுதியானா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ``மோஹித் சுலா என்பர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும்படி... மேலும் பார்க்க

``வயித்துல குழந்தை இருக்கு, விட்டுடு தம்பினு கெஞ்சினேன்’’ - நெஞ்சை உறைய செய்த கர்ப்பிணி வாக்குமூலம்

வேலூர் அருகே வந்துகொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 36 வயது கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அவரை ஓடும் ரயிலில் இருந்தும் கீழே தள்ளிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறத... மேலும் பார்க்க

``தையல் போட்டால் தழும்பு வரும்'' -காயத்தில் Fevi kwik போட்டு ஒட்டிய செவிலியர்... கர்நாடக அதிர்ச்சி!

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆரம்ப சுகாதார மையம். இந்த மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி 14-ம் தேதி கன்னத்தில் ஆழமான காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட குருகிஷன் அன்னப்ப ஹோசாமணி என்ற 7 வயது சி... மேலும் பார்க்க