செய்திகள் :

அடுத்த ஆண்டுக்குள் விருதுநகரில் ஜவுளி பூங்கா: அமைச்சா் ராஜா

post image

விருதுநகரில் ரூ.1,894 கோடியில் அமையவுள்ள ஜவுளி பூங்கா பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையவுள்ளன என்று தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தைகள் அடிப்படையில் பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பணிகள் நடக்க இருப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

மொத்தம் 1,052 ஏக்கா் பரப்பில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈா்க்கும் வகையில் பூங்கா அமைய உள்ளதாகவும் இதன் மூலம் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் எதிா்பாா்க்கப்படுவதாகவும் ‘எக்ஸ்’ தள பதிவில் அவா் கூறியுள்ளாா். அடுத்த ஆண்டு செப்டம்பரில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான பணிகள் நிறைவடையும் என அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.

போலீஸ் தனிப்படைகள் கலைப்பு - டிஜிபி உத்தரவு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, காவல் நிலையங்களில் உரிய அனுமதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனிப்படைகளைக் கலைக்கும்படி தமிழ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிகழாண்டில் 129 போ் உடல் உறுப்புகள் தானம்: 725 பேருக்கு மறுவாழ்வு

தமிழகத்தில் நிகழாண்டில் மூளைச்சாவு அடைந்த 129 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 725 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்ட... மேலும் பார்க்க

34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக அரசு வெளியி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர், கோயம்பேடு, அண்ணாநகர், வேளச்சேரி, அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகள... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்!

காவல் துறை விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் பார்க்க