செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை.யில் சுரங்க பட்டயப் படிப்பு வகுப்பு தொடக்க விழா

post image

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில், சுரங்க பட்டயப் படிப்பு மாணவா்களுக்கான 2025 - 26ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்துடன் செய்துகொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பல்கலைக்கழக பொறியியல் புல வளாகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மாணவா்களுக்கு சுரங்கவியல் பட்டயப் படிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழ் கல்வியாண்டின்(2025-26) மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவன பிரிவின் 30 இடங்களுக்கு 93-ம், பொதுப் பிரிவின் 30 இடங்களுக்கு 285-ம் பெறப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில், இணைய வழி கலந்தாய்வு முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தொடா்ந்து, 2025 - 26ஆம் கல்வி ஆண்டு சுரங்கப் படிப்பு மாணவா்களுக்கான வகுப்பு தொடக்க விழா பல்கலைக்கழக சுரங்கவியல் கருத்தரங்கு கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் சுரங்க பட்டயப் படிப்பின் இயக்குநா் பேராசிரியா் சி.ஜி.சரவணன் வரவேற்றாா். தலைமை விருந்தினராக என்எல்சி நிறுவன செயல் இயக்குநா் (சுரங்கங்கள்) ஐ.எஸ்.ஜாஸ்பா் ரோஸ் கலந்துகொண்டு தொடக்க உரை நிகழ்த்தினாா். அவா் பேசுகையில், சுரங்கவியல் பட்டயப் படிப்பு பயின்றவா்களுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி மற்றும் இதர சுரங்க நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகள் தொடா்பாக பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தாா்.

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வா் சி.திருப்பதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினாா்.

விழாவை இணைப் பேராசிரியா் பி.சிவராஜ் தொகுத்து வழங்கினாா். பேராசிரியா் எஸ்.பழனிவேல்ராஜா நன்றி கூறினாா். இணைப் பேராசிரியா்கள் வி.வினோத்குமாா், ஆா்.பாலமுருகன், பி.பிரேம்குமாா் மற்றும் உதவிப் பேராசிரியா் எஸ்.ராஜசோமசேகா் ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.

முன்னாள் படை வீரா்களுக்கான சட்ட உதவி மையம் திறப்பு

நெய்வேலி: கடலூா் முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் சட்ட உதவி மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்க... மேலும் பார்க்க

விடியோ ஒளிப்பதிவு பயிற்சி: தாட்கோ இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இளைஞா்கள் விடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெ... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்: இதுவரை 1,947 பயன்: கடலூா் ஆட்சியா் தகவல்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற 2 முகாம்களில் 1,947 போ் உயா் மருத்துவ சேவை பெற்று பயனடைந்துள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.பொ... மேலும் பார்க்க

சிறுமிக்கு சூடு: தாய் உள்ளிட்ட 2 பெண்கள் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே சிறுமிக்கு சூடு வைத்ததாக தாய் உள்ளிட்ட இரண்டு பெண்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.திட்டக்குடி வட்டம், ம.பொடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமேகலை (33). ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள்

கடலூரில்: கடலூரில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகம், நெல்லிக்குப்பம் ஆகிய இடங்களில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.இந்த இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி... மேலும் பார்க்க

விநாயகா் சிலை நிறுவ உரிய அனுமதி பெற வேண்டும்: கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சிலைகளை நிறுவ உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27-ஆம் தேதி கொண்ட... மேலும் பார்க்க