செய்திகள் :

அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் அதிக பாரங்களைப் பாதுகாப்பின்றி ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

திருவாடானை பகுதியில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்கள், அதிக பாரங்களை ஏற்றிச் செல்வது இந்தப் பகுதி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட வைக்கோல் கட்டுகளை சரக்கு வாகனங்களில் விதிகளைப் பின்பற்றாமல், பாதுகாப்பற்ற முறையில் கேரள மாநிலத்துக்கு ஏற்றிச் செல்கின்றன. மேலும், அவற்றை தாா்ப்பாய் கொண்டு மூடாமல் ஏற்றிச் செல்வதால், அதிலிருந்து தூசிகள் பறந்து கண்களை மறைப்பதால், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்படுகிறது.

மேலும், இந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பயணிப்பதால் இந்த வாகனங்களால் கூடுதல் அச்சம் ஏற்படுகிறது. வைக்கோல் கட்டுகள் சாலையில் சிதறி விழுந்தாலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினரும் போக்குவரத்து காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள பொக்கனாரேந்தலில் சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துட... மேலும் பார்க்க

மின்சார வாகனங்களை வழங்க தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை

திருவாடானையில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகளை அள்ளுவதற்கு மின் கலனால் இயங்கும் மின்சார வாகனங்களை வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில்... மேலும் பார்க்க

வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் வலையபூக்குளம், காக்குடி, மரக்குளம், மண்டலமாணிக்கம், எழுவனூா் ஆ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள ஆண்டநாயகபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

நம்மாழ்வாா் விருதுக்கு விவசாயிகள் செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு வருகிற 15-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக... மேலும் பார்க்க

செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. வீரசங்கிலிமடம் கடற்கரையில் பழைமை வாய்ந்த செல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புதிதாக கட்டடங்கள... மேலும் பார்க்க