செய்திகள் :

அதிமுகவை அடக்கிய பாஜக; தகுதியானவருக்கே தேர்தலில் வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்!

post image

சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை நடைபெற்றது.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், திமுக பொதுக்குழு கூட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதில் முக்கியமாக மதுரையில் வருகிற ஜூன் 1 ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,

"வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்பதை தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறுபவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவர். தகுதியானவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற உழைக்க வேண்டியது உங்கள்(மாவட்டச் செயலாளர்கள்) கடமை. தடங்கல் என்பது எப்போதும் இருக்கும். அதனை உழைப்பால் வெல்லுங்கள்.

அமைச்சர்கள் சென்னையில் இருப்பதைவிட பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று பணியாற்ற வேண்டும். எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் ஒவ்வொரு வார்டுக்கும் செல்ல வேண்டும்.

நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம்தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம். இருக்க வேண்டும்.

அதிமுகவை அடக்கிவிட்டது பாஜக. பாஜக அச்சுறுத்தலை அரசியல்ரீதியாக எதிர்கொள்வோம்" என்று பேசியுள்ளார்.

இதையும் படிக்க | திமுக பொதுக்குழுக் கூட்டம் எப்போது? - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

புதிதாக கட்சி தொடங்கியோா் முதல்வராக ஆசைப்படுவதா? முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிதாக கட்சி தொடங்கியவா்கள் முதல்வராக ஆசைப்படுவதா என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் 3,000 போ் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவால... மேலும் பார்க்க

போா் வேண்டாம்: வைகோ

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறினாா். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத்தியது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கண்ணப்ப நாயனாா் சிலை நெதா்லாந்தில் இருப்பது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கண்டறியப்பட்டது. மேலும், அந்தச் சிலை ஏலத்த... மேலும் பார்க்க

குடிநீா் பாட்டில்களில் மறைந்திருக்கும் நுண் நெகிழி: உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

கோடை காலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை நேரடி வெயிலில் வைத்தால் நுண் நெகிழிகள் தண்ணீரில் கலந்து உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்... மேலும் பார்க்க

உரிமை கோரப்படாத உடல்கள்: கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை

தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடா்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. வேலூா் மாவட்டம் சோளிங்கா் அரசு மருத்துவமனையி... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு; நேரில் ஆஜராக உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப்... மேலும் பார்க்க