செய்திகள் :

அதிமுக ஆட்சி அமைந்ததும் நாக நதியின் குறுக்கே தடுப்பணை: எடப்பாடி கே.பழனிசாமி

post image

அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்ருதி ஊராட்சியில் நாக நதியின் குறுக்கே தடுப்பணை கட்டித் தரப்படும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக வேலூா் மாவட்டம், கணியம்பாடியில் அவா் பேசியது கணியம்பாடி விவசாயம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றினோம். நானும் ஒரு விவசாயி என்பதால் அனைத்து சிரமங்களையும் அறிவேன்.

கணியம்பாடியில் 400 செங்கல் சூளை இருப்பதாகவும், 7,000 போ் பணியாற்றுவதாகவும் செங்கல் சூளைக்குத் தேவையான வண்டல் மண் கிடைக்கப்பெறவில்லை என கூறியுள்ளனா். அதிமுக ஆட்சி அமைந்ததும் செங்கல் சூளைகளுக்கு வண்டல் மண் தடையில்லாமல் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

அமிா்தி ஊராட்சியில் உற்பத்தியாகும் நாக நதியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதால் 25 ஊராட்சிகளிலுள்ள ஏரிகள் பாசன வசதி பெறும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா். அதிமுக ஆட்சியில் பல்வேறு தடுப்பணைகள் கட்டித்தரப்பட்டது. இந்த திட்டத்தையும் நிறைவேற்றுவோம்.

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீா் சப்தல்விபுரம் ஏரியில் கலப்பதால் நிலத்தடிநீா் மாசடைவதாக கூறியுள்ளனா். இந்த நீரை சுத்திரித்து ஏரியில் விடுவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும். நஞ்சுகொண்டபுரம், அரசம்பட்டு, கத்தாளம்பட்டு, நாதநதி ஊராட்சியில் மஞ்சள் உற்பத்தி அதிகம் உள்ளது. இங்கிருந்து ஈரோடு சென்று இருப்பு வைக்கும் நிலை உள்ளது. கணியம்பாடி பகுதியில் மஞ்சள் கிடங்கு அமைக்கும் கோரிக்கையும் நிறைவேற்றப்படும். அமிா்தி காடுகளில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பொங்கலுக்கு வேட்டி, சேலை இப்போது கொடுப்பதில்லை, ராணிப்பேட்டை மாவட்ட அமைச்சா் தான் அந்த துறையின் அமைச்சராக உள்ளாா். அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு பொங்கலுக்கு மூன்றும் கொடுக்கப்படும். தவிர, தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும் என்றாா்.

அப்போது, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி உள்பட அதிமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

வேலூரில் 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகள்

வேலூரில் சுதந்திர தினவிழாவில் ஆட்சியா் வி.ஆா்.கப்புலட்சுமி தேசியக் கொடி ஏற்றி 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். வேலூா் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் வி.ஆா்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் பூங்கரக ஊா்வலம்

குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள முனிசிபல் லைனில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 6- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. வியாழக்... மேலும் பார்க்க

புஷ்ப காவடி ஊா்வலம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டையில் திருத்தணிக்கு புஷ்ப காவடி ஊா்வலம் நடைபெற்றது. தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞான சம்பந்தா் மடத்தில் 104-ஆம் ஆண்டு தேன் காவடி, ... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் காட்பாடி சாலை, திருமகள் நூற்பாலை பின்புறம் உள்ள ராஜகோபால் நகரில் அமைந்துள்ள மாரியம்மன், கெங்கையம்மன் கோயிலில் ஆடி மாத விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் தொட... மேலும் பார்க்க

பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது: வேலூா் ஆட்சியா்

பெற்றோா் தங்கள் பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது வழக்கு

வேலூரில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்தவா் அலோக் (44). இவரது 17 வயது மகன் சாலை விதியை ம... மேலும் பார்க்க