செய்திகள் :

'அதிமுக-வை தோழமைக் கட்சியாக பார்க்கிறாரா விஜய்?' - சந்தேக தொனியில் திருமா!

post image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அஜித் குமாரின் காவல் மரணம், விஜய்யின் அரசியல் என பலவற்றைப் பற்றியும் திருமா பேசியிருக்கிறார்.

விசிக - திருமா
விசிக - திருமா

திருமாவளவன் பேசியதாவது, 'அஜித் குமார் கொலையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு துணிச்சலான முடிவை எடுத்தார். முதல்வரின் நடவடிக்கைகள் கடும் துயரத்திலும் ஒரு ஆறுதலை தருகிறது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் இதில் அரசியலே செய்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி திமுகவை விமர்சிக்கிறார். அது அவருடைய அரசியல். அதை நாம் விமர்சிக்க முடியாது. ஓரணியில் தமிழ்நாடு என்பதை தமிழ்நாட்டுக்குள் சங்பரிவார அமைப்புகளை புகவிடாமல் செய்ய ஓரணியில் ஜனநாயக சக்திகள் திரள வேண்டும் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

திருமாவளவன்
திருமாவளவன்

ராமதாஸை ஏன் சந்தித்தேன் என செல்வப்பெருந்தகை கூறிவிட்டார். அதற்குமேல் இதை பேச முடியாது. பாமகவின் முரண்பாடுகள் தீரும். இருவரும் ஒன்றிணைந்தே தேர்தலை சந்திப்பார்கள் என்றே நினைக்கிறேன். எடப்பாடிக்கு ரொம்பவே தாமதமாக Z+ பாதுகாப்பை வழங்கியிருக்கிறார்கள். அவரின் பாதுகாப்புக் கருதி ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். விஜய் திமுகவையும் பாஜகவையும் எதிரிகள் என்கிறார். அதிமுகவைப் பற்றி பேசவே இல்லை. அதிமுகவை தோழமை சக்தியாக பார்க்கிறாரா எனும் கேள்வி எழுகிறது.' என்றார்.

IT Wing நிர்வாகிகளுக்கு அரசுப் பணி வழங்குகிறதா DMK ? | ADMK TVK SEEMAN NTK| Imperfect Show 5.7.2025

* சுற்றுப்பயணத்துக்கான Logo-வை வெளியிட்ட எடப்பாடி! * எடப்பாடிக்கு இன்றுமுதல் Z+ பாதுகாப்பு? * அதிமுக உட்கட்சி விசாரணை - உயர்நீதிமன்றத்தில் பதில் சொன்ன தேர்தல் ஆணையம்? * அரசுப் பணிகளில் திமுக ஐடி விங் ... மேலும் பார்க்க

`மராத்தியத்தின் இந்தி எதிர்ப்பு சூறாவளி உற்சாகம் தருகிறது..!' - முதல்வர் ஸ்டாலின்

மராத்திய மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய மூன்றாவது மொழிப்பாடமாக அறிவித்து உத்தரவிட்டது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு. இதற்கு ம... மேலும் பார்க்க

Armstrong: “ஆம்ஸ்ட்ராங் சிந்திய ரத்தம் ஒருபோதும் அழிந்து ஒழியாது” - ஜான் பாண்டியன்

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங்கின் இந்த முத... மேலும் பார்க்க

Armstrong: "அண்ணனுக்கு இந்த அசம்பாவிதம் நடந்திருக்கக் கூடாது"- நினைவேந்தல் கூட்டத்தில் பா.ரஞ்சித்

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் இ... மேலும் பார்க்க

Armstrong: 'மக்கள் மனதில் அன்பையும் அறிவையும் விதைத்தது நம்ம ஆம்ஸ்ட்ராங்'- நயினார் நாகேந்திரன்

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங்இதில்... மேலும் பார்க்க