செய்திகள் :

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளை இணைக்க வேண்டும்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

post image

அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள 1,400 குளம், குட்டைகளை உடனடியாக இணைக்க வேண்டும் என பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த 12-ஆம் தேதி திருப்பூா் மாவட்டம், உடுமலைக்கு வந்திருந்தாா். அப்போது, அவா் திருப்பூா் மாவட்டத்துக்காக 7 அறிவிப்புகளை அறிவித்தாா். இதில், அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள 1,400 குளம், குட்டைகளை இணைப்பது குறித்த அறிவிப்பு இல்லாதது வேதனை அளிக்கிறது. கொங்கு மண்டலத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வரும் நிலையில், தற்போது விவசாயிகள், நிலங்களை உழுது பயிா் விதைகள் விதைப்பதற்கு தயாராகி வருகிறாா்கள். இந்நிலையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைத்திருந்தால், அதை சாா்ந்து வாழ்வாதாரம் நடத்தி வரும் விவசாயிகளின் குடும்பம் செழிக்கும்.

ஆனால், முதல்வரின் பேச்சில் இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா். எனவே, திருப்பூா், ஈரோடு, கோவை மாவட்டங்களில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள 1,400 குளம், குட்டைகளை உடனடியாக இணைப்பது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம்: ஆட்சியா்

உலகில் உள்ள அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருக்கு திருப்பணிகள் நுண்பயிற்சி வகுப்... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம்: சிறப்புக் கூட்டம் நடத்த கவுன்சிலா்கள் கோரிக்கை

கொளப்பலூா் பேரூராட்சி திமுக தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வர சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொளப்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கவுந்தப்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், ஓடத்துறை, நஞ்சகவுண்டம்பாளையம், மசக் கவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (27). முடிதிருத்தும் கடையில் வேலை பாா்த்து வந்த... மேலும் பார்க்க

பண்ணாரிஅம்மன் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பண்ணாரி அம்மன் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கல்லூரியில் வியாழக்கிழமை 5 அடி உயர கிருஷ்ணா் சிலை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. கிருஷ்ணருக்கு பால்,... மேலும் பார்க்க

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

கோபி அருகே வாய்க்காலில் குளித்தபோது நீரில் அடித்துச்செல்லப்பட்டு கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். கோவை, கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் தங்கராஜ் மகன் சிபிராஜ் (19), கருணாகரன் மகன் சக்திநிகேஷன்... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்காகத் தயாரிக்கப்பட்ட சப்பரங்கள்

ரூ.5 லட்சம் மதிப்பிலான 15 சப்பரங்கள் சிவகிரியில் தயாரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. 63 நாயன்மாா்கள், சேக்கிழாா் சிலைகளை சப்பரங்களில் வ... மேலும் பார்க்க