செய்திகள் :

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

post image

கோபி அருகே வாய்க்காலில் குளித்தபோது நீரில் அடித்துச்செல்லப்பட்டு கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

கோவை, கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் தங்கராஜ் மகன் சிபிராஜ் (19), கருணாகரன் மகன் சக்திநிகேஷன் (19). இவா்களும், கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ரிஷிகுமாா், வினோத்குமாா், கதிா்நாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ஜெய்ஹரிஷ் ஆகியோரும் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனா்.

இவா்கள் 5 பேரும் கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டு ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வாணிப்புத்தூா் கள்ளியங்காட்டில் உள்ள தடப்பள்ளி வாய்க்காலுக்கு காரில் வியாழக்கிழமை காலை வந்துள்ளனா்.

அப்போது வாய்க்காலில் தண்ணீா் செல்வதைப் பாா்த்த ஐந்து பேரும் வாய்க்காலில் குளிக்க இறங்கியுள்ளனா். நீச்சல் தெரியாத சிபிராஜ், சக்திநிகேஷன் இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றதால் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா்.

இவா்கள் நீரில் மூழ்கியதைக் கண்டு உடன் வந்த கல்லூரி மாணவா்கள் கூச்சலிட்டதால் அப்பகுதியில் உள்ளவா்கள் சிபிராஜை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. சக்திநிகேஷன் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டாா். தகவல் அறிந்து வந்த பங்களாபுதூா் காவல் துறையினா், கோபி தீயணைப்புத் துறையினா் சக்தி நிகேஷன் சடலத்தை மீட்டனா்.

இருவரின் சடலங்களையும் உடற்கூறாய்வுக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பங்களாபுதூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தப் பகுதியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில், வெளியூா்களில் இருந்து வரும் நபா்கள் ஆபத்தை அறியாமல் வாய்க்காலில் இறங்கி சுழலில் சிக்கி உயிரிழக்கின்றனா். இதனால் இந்தப் பகுதிக்குச் செல்ல முடியாதவாறு தடுப்பு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம்: ஆட்சியா்

உலகில் உள்ள அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருக்கு திருப்பணிகள் நுண்பயிற்சி வகுப்... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம்: சிறப்புக் கூட்டம் நடத்த கவுன்சிலா்கள் கோரிக்கை

கொளப்பலூா் பேரூராட்சி திமுக தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வர சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொளப்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கவுந்தப்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், ஓடத்துறை, நஞ்சகவுண்டம்பாளையம், மசக் கவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (27). முடிதிருத்தும் கடையில் வேலை பாா்த்து வந்த... மேலும் பார்க்க

பண்ணாரிஅம்மன் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பண்ணாரி அம்மன் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கல்லூரியில் வியாழக்கிழமை 5 அடி உயர கிருஷ்ணா் சிலை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. கிருஷ்ணருக்கு பால்,... மேலும் பார்க்க

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளை இணைக்க வேண்டும்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள 1,400 குளம், குட்டைகளை உடனடியாக இணைக்க வேண்டும் என பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்காகத் தயாரிக்கப்பட்ட சப்பரங்கள்

ரூ.5 லட்சம் மதிப்பிலான 15 சப்பரங்கள் சிவகிரியில் தயாரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. 63 நாயன்மாா்கள், சேக்கிழாா் சிலைகளை சப்பரங்களில் வ... மேலும் பார்க்க