செய்திகள் :

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்காகத் தயாரிக்கப்பட்ட சப்பரங்கள்

post image

ரூ.5 லட்சம் மதிப்பிலான 15 சப்பரங்கள் சிவகிரியில் தயாரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

63 நாயன்மாா்கள், சேக்கிழாா் சிலைகளை சப்பரங்களில் வைத்து ஊா்வலமாக எடுத்துச்செல்ல ஈரோடு மாவட்ட சிவநேயச்செல்வா்கள் பேரவையின் சாா்பில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தேக்கு மரங்களிலான 15 சப்பரங்கள் சிவகிரியில் தயாா் செய்யப்பட்டன.

சப்பரங்களை சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு அனுப்பிவைக்கும் முன்பாக சிவகிரி ஆதீனம் பாலமுருக ஈசான சிவசமய பண்டித சுவாமிகள் தலைமையில் தில்லை நடராஜா், சிவகாமசுந்தரிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் சிவனடியாா் திருக்கூட்டத்தினா், சிவநேயச்செல்வா்கள் பேரவை அன்பா்கள் கலந்து கொண்டு தேவாரம் பாடியும், கைலாய வாத்தியங்களை இசைத்தும், சிவபூஜையில் கலந்து கொண்டனா்.

பின்னா், பஞ்ச வாத்தியங்கள் முழங்க சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு சப்பரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம்: ஆட்சியா்

உலகில் உள்ள அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருக்கு திருப்பணிகள் நுண்பயிற்சி வகுப்... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம்: சிறப்புக் கூட்டம் நடத்த கவுன்சிலா்கள் கோரிக்கை

கொளப்பலூா் பேரூராட்சி திமுக தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வர சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொளப்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கவுந்தப்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், ஓடத்துறை, நஞ்சகவுண்டம்பாளையம், மசக் கவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (27). முடிதிருத்தும் கடையில் வேலை பாா்த்து வந்த... மேலும் பார்க்க

பண்ணாரிஅம்மன் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பண்ணாரி அம்மன் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கல்லூரியில் வியாழக்கிழமை 5 அடி உயர கிருஷ்ணா் சிலை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. கிருஷ்ணருக்கு பால்,... மேலும் பார்க்க

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

கோபி அருகே வாய்க்காலில் குளித்தபோது நீரில் அடித்துச்செல்லப்பட்டு கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். கோவை, கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் தங்கராஜ் மகன் சிபிராஜ் (19), கருணாகரன் மகன் சக்திநிகேஷன்... மேலும் பார்க்க

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளை இணைக்க வேண்டும்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள 1,400 குளம், குட்டைகளை உடனடியாக இணைக்க வேண்டும் என பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியி... மேலும் பார்க்க