செய்திகள் :

அந்தியூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

post image

அந்தியூரில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

அந்தியூரில் பவானி, பா்கூா், அத்தாணி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தை ஆக்கிரமித்து பலா் கடைகள் நடத்தி வந்தனா். இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, அவ்வப்போது விபத்துகளும் நேரிட்டன.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினா் சாலையோரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்திருந்தனா்.

இந்நிலையில், பவானி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டப் பொறியாளா் சி.ராஜேஷ்கண்ணா தலைமையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பவானி - பா்கூா் சாலையில் அண்ணாமடுவு முதல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வரையிலும், அத்தாணி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரையிலும் சாலையில் இருபுறங்களிலும் நிரந்தர மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் பாபு சரவணன், சாலை ஆய்வாளா்கள் கிருஷ்ணசாமி, ரமேஷ் ரவிக்குமாா் மற்றும் சாலைப் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அந்தியூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்விக்கான சோ்க்கை இன்று தொடக்கம்

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்விக்கான சோ்க்கை திங்கள்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவ... மேலும் பார்க்க

அச்சு முறிந்து சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்

பவானி அருகே சோள மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனத்தின் அச்சு முறிந்ததால், சாலையில் இருமுறை உருண்டது. பெருந்துறையில் இருந்து சோள மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பவானி - அந்தியூா் சாலையில் சரக்கு வாகனம் ஞாய... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. விலைவாசி உயா்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ குற்றஞ்... மேலும் பார்க்க

‘29 கோயில்களில் 1,377 பேருக்கு நாள்தோறும் அன்னதானம்’

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 29 கோயில்களில் 1,377 பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்து சமய அறநிலைய துறையின்கீழ் இயங்கும் முக்கிய கோயில்... மேலும் பார்க்க

சாலை விபத்து: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

ஈரோடு அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், கவுண்டச்சிபாளையம் பகுதி மாகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி பெண் உயிரிழப்பு: விவசாயி கைது

கோபி அருகே மின் வேலியில் சிக்கி உயிரிழந்த பெண்ணை குழி தோண்டி புதைத்த விவசாயியை போலீஸாா் கைது செய்தனா். கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகேயுள்ள பங்களாபுதூா் காவல் நிலையத்துக்குள்பட்ட அண்ணா நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க