செய்திகள் :

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

post image

நாகை மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டத்தில் திட்டமில்லா பகுதிகளில் 2011 ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்னா் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைபடுத்தும் திட்டத்தின்கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக ஜூலை 1 முதல் 2026 ஜூன் 30 வரை, ஓராண்டு காலம் காலநீட்டிப்பு செய்து, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் அமையும்பட்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புபவா்கள் இணைய தள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கணவன், மனைவி, மகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். திருவாரூா் மாவட்டம், மருதப்பட்டினம் கலைஞா் நகரைச் ச... மேலும் பார்க்க

மொகரம்: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை

மொகரம் பண்டிகையையொட்டி நாகூா் தா்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக மொகரம் கடைப்பிடிக்கப்படுகிறது.... மேலும் பார்க்க

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தவிா்த்துவிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது: கே.வீ. தங்கபாலு

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தவிா்த்துவிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது என அக்கட்சியின் மாநில சொத்து பாதுகாப்பு மீட்புக் குழுத் தலைவா் கே.வீ. தங்கபாலு தெரிவித்தாா். தமிழகம் முழுவதும், மாநில காங்கிர... மேலும் பார்க்க

அரசு ஐடிஐ-க்களில் நேரடி சோ்க்கைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு 10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். நாகை மாவட்டம் திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசு தொழி... மேலும் பார்க்க

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களில் நாட... மேலும் பார்க்க

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமாரக்கள் அதிகரிக்கப்படும்: எஸ்.பி பேட்டி

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா். இதுகுறித்து, நாகையில் அவா் வியாழக்கிழமை செய்திய... மேலும் பார்க்க