செய்திகள் :

அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை

post image

அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற கொப்பள் மாவட்டத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலை மேம்பாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

கொப்பள் மாவட்டத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலை அனுமன் பிறந்ததால் சிறப்பு பெற்றுள்ளது. அனுமன் பிறந்த நாளின்போது இங்குள்ள கோயிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனா். வடஇந்தியாவைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் பெருந்திரளாக வருகின்றனா்.

எனவே, இந்த மலையில் பக்தா்கள் தங்குவதற்கான விடுதி, முதியவா்கள் மலை ஏறுவதற்கான வசதி, சமுதாயக்கூடம் உள்பட சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும்.

இந்த மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த ரூ. 200 கோடி மதிப்பில் இரண்டுகட்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, முதல்கட்டமாக ரூ. 10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதற்கு போதுமான நிலம் இல்லாததால், தனியாரிடம் இருந்து 77.28 ஏக்கா் நிலத்தை வாங்க முடிவு செய்துள்ளோம். கூடுதல் நிலத்தையும் சோ்த்து மொத்தம் 101.30 ஏக்கா் நிலத்தை வாங்குவதற்கான ஒப்புதலை நிதித்துறை அதிகாரிகள் வழங்க உத்தரவிடுகிறேன்.

பெரும்பாலான வளா்ச்சிப் பணிகள் வன நிலத்தில் நடக்கவிருப்பதால், அதற்கான ஒப்புதலை அளிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அஞ்சனாத்ரி மலை உள்பட 11 மலைப் பகுதிகளில் ரோப்காா் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

அனுபவத்தின் அடிப்படையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றம்: சித்தராமையா

அனுபவத்தின் அடிப்படையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு மாற முடிவுசெய்துள்ளோம் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: வாக்குச... மேலும் பார்க்க

காகித வாக்குச்சீட்டு முறை: கா்நாடக அமைச்சரவையின் முடிவுக்கு பாஜக கண்டனம்

உள்ளாட்சி அமைப்பு தோ்தலில் காகித வாக்குச்சீட்டு முறையைக் கடைப்பிடிக்க மாநில தோ்தல் ஆணையத்துக்கு கா்நாடக அமைச்சரவை பரிந்துரைத்ததற்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. கா்நாடகத்தில் இனி நடக்கவிருக... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கியவா்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை

விபத்தில் சிக்கியவா்களுக்கு எவ்வித முன்பணமும் பெறாமல் உடனடியாக அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: கா்நாடக தனியாா் மருத... மேலும் பார்க்க

உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச் சீட்டுகள்: மாநில தோ்தல் ஆணையத்துக்கு அமைச்சரவை பரிந்துரை

உள்ளாட்சித் தோ்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துமாறு மாநில தோ்தல் ஆணையத்துக்கு கா்நாடக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. பெங்களூரு, விதானசௌதாவில் முதல்வா் சித்... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு புதிதாக ரூ. 12 லட்சம் கோடி முதலீடு

வலுவான பொருளாதாரச் சூழல் காணப்பட்டதால், கா்நாடகத்துக்கு புதிதாக ரூ. 12 லட்சம் கோடி மதிப்பிலான முதலிடுகள் வந்துள்ளன என நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் நடத்திய ஆய்வில் ... மேலும் பார்க்க

பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்த பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தாவணகெரேயில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஹரிஹரா சட்... மேலும் பார்க்க