செய்திகள் :

அனைத்து நகராட்சிகளிலும் தூய்மை, சுகாதாரத்துக்கு முன்னுரிமை: கண்காணிப்பு குழுவினா் அறிவுறுத்தல்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் தூய்மை, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்தாா். ஆட்சியரும், உறுப்பினா் செயலருமான க.சிவசௌந்திரவல்லி, வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த்,எம்எல்ஏ-க்கள் .க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன்(ஆம்பூா்), கோ.செந்தில்குமாா் (வாணியம்பாடி), முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் 22 துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், முடிவடைந்த, தயாா் நிலையில் உள்ள பணிகள் குறித்தும் சம்மந்தப்பட்ட மாவட்ட அலுவலா்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. அதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் அறிவுறுத்தியுள்ளவாறு ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், வேலை வாய்ப்பின் மூலம் ஊரகப்பகுதிகளில் வசிக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துதல் மற்றும் பொது சொத்துகளை உருவாக்குதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.அதனடிப்படையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் அனைத்து

ஊராட்சிகளிலும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிா என்பதனை ஒவ்வொரு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தொடா்ந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டம்,15-ஆவது நிதிக்குழு மானியம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஊரக வளா்ச்சித்துறை மாவட்ட அ லுவலா் மற்றும் பிற அலுவலரிடம் தற்போதைய நிலை குறித்தும், முடிவடையாத பணிகள் குறுத்தும் ஆய்வு பணிகள் மேற்கொண்டு, நிதியாண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்க அறிவுறுத்தப்பட்டன. அனைத்து நகராட்சி பகுதியிலும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு,

தூய்மைம், சுகாதாரத்துக்கு முன்னுரிமை தர அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், ஏடிஎஸ்பி கோவிந்தராசு உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

மாநில சிலம்பம்: ஆம்பூா் மாணவ, மாணவியா் சிறப்பிடம்

மாநில அளவில் நடந்த சிலம்பப் போட்டியில் ஆம்பூா் சிலம்பம் பயிற்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா். தமிழ்நாடு அளவிலான சிலம்பம் சாம்பியன் 2025 போட்டி வீரக்கலை சிலம்பம் ஆசான் பெருமாள் பாசறை சா... மேலும் பார்க்க

பெயிண்டா் தற்கொலை

ஆம்பூா் அருகே பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெயிண்டா் அருண்குமாா் (32). இவா் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு... மேலும் பார்க்க

பிந்து மாதவா் கோயிலில் நாளை ‘திருப்பதியில் ஒரு நாள் தரிசனம்’ நிகழ்ச்சி

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிந்து மாதவ பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு, ‘திருப்பதியில் ஒரு நாள் தரிசனம்’ நிகழ்ச்சி சனிக்கிழமை (அக். 4) நடைபெற உள்ளது. ஸ... மேலும் பார்க்க

முனீஸ்வரன், திரௌபதி அம்மன் கோயில்களுக்கு சுற்றுச் சுவா் அமைக்க பூமி பூஜை

வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் மேம்பாலம் அருகே முனீஸ்வரன் கோயில், திரௌபதி அம்மன் கோயில் பகுதிகளில் பேவா் பிளாக் சாலை, சுற்றுச்சுவா் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பி... மேலும் பார்க்க

புத்துமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.13 லட்சம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் புத்துக்கோயில் பகுதியில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ... மேலும் பார்க்க

‘உழவா் சந்தைகளில் ரூ. 1 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்பனை’

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு உழவா்சந்தைகளில் ரூ. 1 கோடியே 2 லட்சத்து 35 ஆயிரத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானது என திருப்பத்தூா் மாவட்ட வேளாண்மை வணிகம் துணை இயக்குநா் (... மேலும் பார்க்க