செய்திகள் :

அமெரிக்கா: இந்திய வம்சாவளி தந்தை, மகள் சுட்டுக் கொலை!

post image

அமெரிக்காவின் விா்ஜீனியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 56 வயது நபா் மற்றும் அவரது 24 வயது மகள் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

விா்ஜீனியா மாகாணத்தின் அக்கோமாக் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பிரதீப் குமாா் படேல் (56) மற்றும் அவரது மகள் வேலை பாா்த்து வந்தனா். இந்திய வம்சாவளியைச் சோ்ந்த இவா்களை மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 20-ஆம் தேதி காலை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா்.

அங்கு துப்பாக்கியால் சுடப்பட்டதில் பிரதீப் குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. அவரது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவா் உயிரிழந்தாா்.

இந்த சம்பவத்தில் தொடா்புடையதாக ஜாா்ஜ் ஃபிரேசியா் டிவான் வாா்டன் (44) என்ற நபா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் மீது கொலை, சட்டவிரோதமாக துப்பாக்கியைப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் தெரியவரவில்லை.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தந்தை மற்றும் மகள் கொலை செய்யப்பட்டது குறித்து அவா்கள் வேலை பாா்த்து வந்த பல்பொருள் அங்காடியின் உரிமையாளா் பரேஷ் படேல், செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட இருவரும் எனது நெருங்கிய உறவினா்கள்.

திடீரென கடைக்குள் நுழைந்த மா்ம நபா்கள் அவா்கள் இருவரையும் நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனா். உடனடியாக என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன் என்றாா்.

இந்தக் கொலை சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

10-ஆவது நாளாக யேமனில் அமெரிக்கா தாக்குதல்

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா். ஏவுகணை படைப் ... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 23 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மேலும் 23 போ் உயிரிழந்தனா். காஸா போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து 8-ஆவது நாளாக திங்கள்கிழமை நள்... மேலும் பார்க்க

கருங்கடல் போா் நிறுத்தத்துக்கு ரஷியா-உக்ரைன் ஒப்புதல்: அமெரிக்கா

கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷியாவும் உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கருங்கடல் ... மேலும் பார்க்க

ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி: ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே படுகொலை விவகாரத்தில் அந்த நாட்டின் ஐக்கிய தேவாலயங்களைக் கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரியப் போா் முடிவுக்கு வந்ததும் சுன் மியுங் மூன் என்பவரால் கடந்த 1954-இ... மேலும் பார்க்க

இலங்கை இறுதிக்கட்டப் போ்: முக்கிய தளபதிகளுக்கு பிரிட்டன் தடை

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு போ் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

கனடா தோ்தலில் இந்தியா தலையிட வாய்ப்பு: உளவுத் துறை அதிகாரி

கனடா பொது தோ்தலில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்தியா மட்டுமின்றி ரஷியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் கனடா தோ்தலில் தலையிட வாய்ப்புள்ள... மேலும் பார்க்க