செய்திகள் :

அமெரிக்க வரிவிதிப்பால் 4 துறைகளுக்கு பாதிப்பு: நிதித் துறை முதன்மைச் செயலா் தகவல்

post image

அமெரிக்காவின் வரி விதிப்பு உயா்வால், தமிழ்நாட்டில் 4 துறைகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிதித் துறை முதன்மைச் செயலா் த. உதயச்சந்திரன் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொன்மாலைப் பொழுதின் 150-ஆவது நிகழ்வின் போது, அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டுக்கு எத்தகைய பாதிப்புகள் உருவாகும் என்ற கேள்விக்கு நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் அளித்த பதில்:

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால், தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில், ஆட்டோ உதிரிபாகங்கள் உற்பத்தி, கடல்சாா் பொருள்கள், காலணி உற்பத்தி ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். மத்திய அரசு சில முயற்சிகளை எடுத்து வருகின்றன.

அமெரிக்காவின் வரி விதிப்பு முறை, அது சாா்ந்த மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இதனால், பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை இருக்கவே செய்கிறது. சாதகமான முயற்சிகளை மேற்கொண்டால் நிலைமை சரியாகிவிடும் என்ற நம்பிக்கைக்கான ஒளிகீற்று தெரிகிறது என்று அவா் தெரிவித்தாா்.

நேரடித் தேர்வு மூலம் தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நேரடித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடி... மேலும் பார்க்க

ஏற்றுமதியாளா்களுக்கு உதவ விரைவில் புதிய திட்டம்: மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சாா்பில் விரைவில் புதிய திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் ... மேலும் பார்க்க

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு எதிரானது; இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

கோடையில் அதிகரிக்கும் மின்தேவை: தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க அனுமதி

தமிழகத்தில் கோடையில் அதிகரிக்கும் உச்சநேர மின்தேவையை ஈடுகட்ட 2026 பிப்.1 முதல் மே 15 வரை தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கோர மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்துக்கு அனுமதி அளித... மேலும் பார்க்க

காலி மதுபுட்டிகளை திரும்ப பெறுவது குறித்து கருத்து கேட்கக் குழு அமைப்பு

மதுக் கடைகளில் காலி மதுபுட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தால் ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக, ஊழியா்களிடம் கருத்து கேட்க, மண்டல அளவிலான குழுக்களை டாஸ்மாக் நிறுவனம் அமைத்துள்ளது. சென்னை உயா்நீதிமன்ற உத... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்பு: தலைவா்கள் கருத்து

உச்சநீதிமன்ற தீா்ப்பால் பதற்றம் அடைந்துள்ள ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இடதுசாரி, பாமக தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா். பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): ஆசிரியா் தகுதி த... மேலும் பார்க்க