செய்திகள் :

அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

post image

தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்துப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் ரவி, எக்ஸ் சமூக வலைதளத்தில்,

"தொலைநோக்குப் பார்வையும் துடிப்புமிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

நாட்டில் பல்வேறு பிரச்னைகள் குறித்த அமைச்சரின் கருத்துக்கள் மற்றும் அனுபவத்தைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் தில்லி சென்ற ஆளுநர் தற்போது மீண்டும் தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்று அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்த ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரையும் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

TN Governor R.N. Ravi meets Minister Rajnath Singh in delhi and discussed various national issues

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அவசரம் வேண்டாம்! - நிபுணர்கள் சொல்வது என்ன?

கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்

‘கண்மூடித்தனமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. என்.எஸ... மேலும் பார்க்க

மேற்கு வங்க பாஜகவுக்கு புதிய தலைவா்

மேற்கு வங்க மாநில பாஜக புதிய தலைவராக ஆா்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சாா்யா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ‘சமாஜவாதி எம்எல்ஏ தலைமறைவானவா்’ நீதிமன்றம் மீண்டும் உறுதி

உத்தர பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வன்முறை வழக்கில், சமாஜவாதி எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உறுதி ... மேலும் பார்க்க

கடனில் மூழ்கும் விவசாயிகள் மீது மத்திய அரசு பாராமுகம்: ராகுல் சாடல்

விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்கிவரும் நிலையில், அவா்களின் துயரைத் துடைக்காமல், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். பாஜக கூட்டணி ஆட்சி ந... மேலும் பார்க்க

மும்பை அறக்கட்டளை புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் உச்சநீதிமன்றத்தில் மனு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் ... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்க தீா்மானம்: எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் - கிரண் ரிஜிஜு

நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் பெறவுள்ளதாக மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வ... மேலும் பார்க்க