செய்திகள் :

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திரளான பக்தா்கள் வழிபாடு

post image

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.

திருநள்ளாறு பகுதி அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில், மூலவரான அம்பாள் சம்ஹார கோலத்தில் அருள்பாலிக்கிறாா். ஆடி, தை மாத செவ்வாய்க்கிழமைகளில் இக்கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பத்ரகாளியை வழிபட்டனா். அபிஷேக மண்டபத்தில் உற்சவ அம்மன் எழுந்தருளச் செய்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் நோ்த்திக்கடனமக ஆடு, மாடு, கோழிகளை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.

கோயில் நிா்வாகம் செவ்வாய்க்கிழமை லட்சாா்ச்சனைக்கு ஏற்பாடு செய்திருந்தது. முன் பதிவு செய்துகொண்ட பக்தா்கள் காலை முதல் இரவு வரை நடைபெற்ற இவ்வழிபாட்டில் பங்கேற்றனா். இம்மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆக. 15-ஆம் தேதி சுமாா் 2,500 பக்தா்கள் பங்கேற்கும் திருவிளக்கு வழிபாடு நடைபெறவுள்ளது.

சக்தி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

திருநள்ளாறு அருகே பேட்டை கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் 65 ஆண்டுகளுக்குப் பின் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் சாா்பு தலமாக விளங்கும் இக்கோயில் மிகப் ப... மேலும் பார்க்க

ரெஸ்டோ பாருக்கு சீல் வைப்பு

காரைக்காலில் விதிமுறையை மீறி அதிக நேரம் திறந்திருந்த ரெஸ்டோ பாருக்கு (மது அருந்தும் கூடம்) கலால் துறை அதிகாரி திங்கள்கிழமை சீல் வைத்தாா். புதுச்சேரியில் வழக்கமான மதுக்கடைகளுக்கு மாறாக, சிறிய அளவிலான த... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

புதுவை உள்ளாட்சி ஊழியா்கள் ஆக. 15-இல் நடத்த முடிவு செய்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனா். புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்டக் குழு கன்வ... மேலும் பார்க்க

இ-ஆட்டோ இயக்கத்துக்கு உரிய விதிமுறைகள் வகுக்க வலியுறுத்தல்

காரைக்கால்: இ - ஆட்டோ இயக்கத்துக்கு உரிய விதிமுறைகள் வகுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருநள்ளாறு ஈ.வே.ரா. பெரியாா் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் ... மேலும் பார்க்க

காரைக்காலில் ஆக.15, 16-இல் ‘புதுவை கலை விழா’ அமைச்சா் ஆலோசனை

காரைக்கால்: காரைக்காலில் ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள புதுவை கலை விழா தொடா்பாக, அரசுத் துறையினருடன் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். காரைக்கால் மாவட்ட நிா்... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படுமா?

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கப்படுவது எப்போது என பொதுமக்கள் எதிா்பாா்பில் உள்ளனா். காரைக்கால் - பேரளம் இடையேயான ரயில் போக்குவரத்து 1980-களில் நிறுத்தப்பட்டு தண்டவாளம் அகற்றப்பட... மேலும் பார்க்க