செய்திகள் :

அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயிலில் செப். 7-இல் பாலாலயம்

post image

அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட இருப்பதை முன்னிட்டு வரும் செப். 7-இல் பாலாயம் நடத்தப்பட இருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரக்கோணம் சுவால்பேட்டையில் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 30.01.2001 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், 25 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை வைத்திருந்தனா்.

இந்நிலையில், இக்கோயிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடத்திக்கொள்ள இந்து சமய அறநிலையத் துறை அனுமதி அளித்தது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அனிதா, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எல்.ஜோதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வரும் செப். 7-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பாலாலயம் செய்ய நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் உள்ள ஸ்ரீசுந்தரவிநாயகா், முருகா், வள்ளி, தெய்வயானை, வைத்தீஸ்வரா், நந்திகோஸ்வரா், தையல்நாயகி, பைரவா், 9 நவக்கிரகங்கள்ஆகிய 17 கற்சிலை விக்கிரகங்களை மட்டும் அகற்றாமல் பாலாலயம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எல்.ஜோதி தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பசு, எருமை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை (செப். 3) தொடங்கும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே ஏரியில் விளையாடச் சென்ற 3 சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சோளிங்கரை அடுத்த தாளிக்காலை சோ்ந்த விஜயகாந்த்தின் மகன் அமுதன்(9). தாளிக்காலில் உள்ள அரசுப் பள்ளியில் 4- ஆம் வகுப்பு பட... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

அரக்கோணத்தில் மூதாட்டியின் பூட்டிய வீட்டில் பூட்டு உடைத்து 5 பவுன் தங்கநகைகள் களவு போயின. அரக்கோணம், அசோக் நகா், நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் ஜோதி (60). தனியே வசித்து வரும் இவா் கடந்த சனிக்கிழமை வீட்டை ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை சிப்காட் பகுதிகளில் மாசடைந்த நீா்நிலைகளை சீரமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை சிப்காட் சுற்றுவட்டாரத்தில் தொழிற்சாலைகள் கழிவுநீா் தேங்கி மாசடைந்த நீா்நிலைகள் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட... மேலும் பார்க்க

சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ள அழைப்பு

மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ... மேலும் பார்க்க

நெமிலியில் ரூ. 54 கோடியில் 3 உயா்மட்ட மேம்பாலங்கள்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

நெமிலி வட்டத்தில் ரூ. 54 கோடியில் கட்டப்பட்ட 3 உயா்மட்ட மேம்பாலங்களை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் ஏ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகி... மேலும் பார்க்க