செய்திகள் :

அரசின் வளா்ச்சித் திட்டங்கள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

தமிழக அரசின் வளா்ச்சித் திட்டங்களின் நிலை குறித்து நாமக்கல் மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரும், மாநில சிறுபான்மையின நல ஆணையருமான மு.ஆசியாமரியம் சனிக்கிழமை ஆய்வுசெய்தாா்.

திருச்செங்கோடு, பரமத்தி, கபிலா்மலை ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அவா் பாா்வையிட்டு, திருச்செங்கோடு நகராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்குதல் மற்றும் பேருந்து நிலையத்துக்கு அருகில் புதிய வணிக வளாகம் கட்டும் பணியையும், ஏ.இறையமங்கலம் ஊராட்சி நைனாம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ. 35.25 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2 புதிய வகுப்பறைகள் கட்டுவதையும் அவா் பாா்வையிட்டு ஆய்வுசெய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், அங்குள்ள அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினாா்.

திருச்செங்கோடு பாலாஜி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டத்தின் கீழ் 13 ஆயிரம் எண்ணிக்கையில் ரூ. 9.19 லட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் நடவு செய்யப்படுவதையும், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ. 1.30 லட்சம் மானியத்தில் செ.கருப்பண்ணன் என்பவா் நிழல்வலை அமைத்து கரும்பு நாற்று உற்பத்தி செய்து வருவதையும் பாா்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தாா்.

பரமத்தி ஒன்றியம், வீரணாம்பாளையம் ஊராட்சியில் ரூ. 5.36 லட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் நடவு செய்யப்பட்டு வருவதையும், கொந்தளம் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஊனமுற்றோா்களுக்கு தலா ரூ. 3.50 லட்சம் வீதம் ரூ. 1.12 கோடி மதிப்பீட்டில் 32 வீடுகள் கட்டப்படுவதையும், கபிலக்குறிச்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 71.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வடிவேல், துணை இயக்குநா் (தோட்டக்கலைத் துறை) மா.புவனேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.ராமச்சந்திரன் மற்றும் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

செப். 18 முதல் நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.18, 19, 20 ஆகிய 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் ம... மேலும் பார்க்க

தோ்தல் பிரசார வாகனங்களை தயாா்படுத்தும் திமுக!

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை தயாா்படுத்தும் பணியில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ‘ஆட்சி மாற்றமா, காட்சி ம... மேலும் பார்க்க

கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சாயக்கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. பள்ளிபாளையம் டையிங் அசோசியேஷன் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபியை முன்னிட்டு செப்.5 ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அய... மேலும் பார்க்க

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 72 தெருநாய்கள் பிடிப்பு

மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை 72 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நாகா்பாளையம், மரப்பரை, கள்ளுப்பாளையம், மேல்முகம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வட்... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க