செய்திகள் :

அரசியலமைப்பை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்: ராகுலுக்கு ஜெய்சங்கர் அறிவுரை!

post image

அரசியலமைப்பு புத்தகத்தைக் கையில் எடுப்பதில் எந்தப் பயனுமில்லை. அதனை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக விமர்சித்தார்.

தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது,

அரசியலமைப்பு சட்டம் பற்றிப் பேசுபவர்கள் அதன் உணர்வைக் காக்க தவறிவிட்டனர். எமர்ஜென்சிக்கு மன்னிப்பு கேட்கத் தவறியவர்களிடம், அரசியலமைப்பு சட்டம் பற்றி என்ன மரியாதையை எதிர்பார்க்க முடியும். அரசியலமைப்பின் நகலைக் கையில் எடுத்துச் சுற்றித் திரிவதால் எந்தப் பயனும் இல்லை. அரசியலமைப்பை இதயத்திலிருந்து மதிக்க வேண்டும்.

எமர்ஜென்சியின் போது அரசியலமைப்பு ஐந்து முறை திருத்தப்பட்டது. அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எமர்ஜென்சி கொண்டு வந்ததற்காக இந்திரா காந்தி குடும்பத்தினர் இன்று வரை எந்தவித வருத்தமும் தெரிவித்ததில்லை. அவசரநிலை நாட்டின் உணர்வை உடைக்கும் இருண்ட முயற்சி. அவசரநிலை நமக்குக் கற்றுக் கொடுத்த ஒரு பாடம் என்றால், ஒருபோதும் சுதந்திரத்தை அற்பமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான்.

அவசரநிலையை இந்திய ஜனநாயக வரலாற்றில் "இருண்ட அத்தியாயம்" என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார் என்று அவர் தெரிவித்தார்.

SUMMARY

Union External Affairs Minister S Jaishankar indirectly criticized Congress MP Rahul Gandhi, saying that there is no point in picking up the Constitution book. He should learn to respect it.

எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள்: விரைந்து விநியோகிக்க ரஷியாவுக்கு வலியுறுத்தல்

இந்தியாவுக்கான எஸ்-400 டிரையம்ஃப் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை விரைந்து விநியோகிக்க வேண்டும் என்று ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரே பெலோசோவ் உடனான சந்திப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ரா... மேலும் பார்க்க

புரி ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: பலர் காயம்

ஒடிஸாவின் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 13 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கூட்டாக ரூ.22 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 13 நக்சல்கள், காவல் துறையினரிடம் இன்று சரண்டைந்துள்ளனர். பிஜப்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில், அம்மாநிலத்த... மேலும் பார்க்க

இந்தியா - ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உரையாடல்!

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் உரையாடியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்ச்சியுடன், இன்று (ஜூன் 27) மதியம் செல்... மேலும் பார்க்க

கலப்பட எரிபொருள்: நடுவழியில் நின்ற ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள்

'கலப்பட' எரிபொருள் காரணமாக ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் நின்றதால் பரபரப்பு நிலவியது.மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் பாதுகாப்பு வாகனங்களில் 19 வாகனங்கள் கலப்பட பெட்ரோல் மற... மேலும் பார்க்க

கோவா: சட்டவிரோதமாக வசித்த 79 வெளிநாட்டவர் நாடுகடத்தல்!

கோவா மாநில காவல் துறையினர் மேற்கொண்ட ”ஆபரேஷன் ஃபிளஷ் அவுட்” நடவடிக்கையின் மூலம், இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த 79 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ”ஆபரேஷன் ஃபிளஷ் அவுட்” நடவடிக்கையின் மூலம் ... மேலும் பார்க்க