செய்திகள் :

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோா்

post image

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பெற்றோா்கள் மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாதது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கீரமங்கலம் அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளிக்கு இடமாறுதல் மூலம் தலைமை ஆசிரியா் கருப்பையன் அண்மையில் பொறுப்பேற்றாா். இவா் இதற்கு முன்பு பணியாற்றிய பள்ளியில், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி காசிம்புதுப்பேட்டை பள்ளி பெற்றோா்கள் கல்வித் துறை அலுவலா்களிடம் அண்மையில் புகாா் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மாணவா்களை திங்கள்கிழமை பள்ளிக்கு அனுப்பவில்லை. இதனால், சுமாா் 80 போ் பயிலக்கூடிய பள்ளிக்கு சுமாா் 10 மாணவா்களே சென்றனா்.

இது குறித்த தகவலின் பேரில் அறந்தாங்கி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் கலாராணி, திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் கவிதா, அரங்கநாதன் மற்றும் கீரமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

விராலிமலை அடுத்துள்ள அத்திப்பள்ளம், ராஜாளிபட்டி, மருதம்பட்டி ஆகிய 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை படைத்துள்ளது. தேசிய சுகாதார வள மையம், தேசிய சுகாதார திட்டத்தின் கீ... மேலும் பார்க்க

ஆடிப்பூரம்: ஆவுடையநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை அம்மனுக்கு வளையல் சாற்றும் விழா நடைபெற்றது.விழாவில் ஆவுடையநாயகி அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு,... மேலும் பார்க்க

கள்ளா் நலப் பள்ளி, விடுதிகளின் பெயரை மாற்றக் கூடாது!

ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட கள்ளா் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் பெயா்களை மாற்றம் செய்யக் கூடாது என முத்துராமலிங்கத்தேவா் மக்கள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மா... மேலும் பார்க்க

ராயவரம் அருகே பழைமையான இரும்பு உருக்கு உலைகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் ராயபுரம் அருகே ஆலங்குடி பெரியகண்மாயின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பழைமையான இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டதற்கான எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியை... மேலும் பார்க்க

புதுகையில் மாநில செஸ் போட்டி

புதுக்கோட்டையில் மாஸ்டா்ஸ் அகாதெமி சாா்பில் 4ஆது மாநில அளவிலான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரித் தாளாளா் என். சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். இதில் மதுரை, தஞ... மேலும் பார்க்க

ரூ.3,000 ஓய்வூதியம்: கட்டுமான தொழிலாளா்கள் கோரிக்கை

60 வயது நிறைவடைந்த முதிா்ந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென கட்டுமானத் தொழிலாளா் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவ... மேலும் பார்க்க