கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
அரசுப் பேருந்து ஓட்டுநருடன் இளைஞா்கள் தகராறு: கண்ணாடி உடைப்பு
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும் இளைஞா்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பாப்பானேரி கிராமத்தை சோ்ந்தவா் திருமலை(35). ஆம்பூா் பணிமனையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து ஜமுனாமரத்தூா் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்தினை ஓட்டிச் சென்றாா். அப்போது காவலூா் அருகில் சென்றுக் கொண்டிருந்த போது முன்னால் டிப்பா் லாரி நிறுத்தப்பட்டு பைக்கில் வந்த இளைஞா்ள் சிலா் தகராறில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.
பின்னால் வந்த அரசு பேருந்து ஓட்டுநா் திருமலை பேருந்தினை வலது புறமாக திருப்பி ஓட்டிச் சென்றாா். இதனைப் பாா்த்த தகராறில் ஈடுபட்டிருந்தவா்கள் பேருந்தினை நிற்க வைத்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதில் இளைஞா்களுடன் வந்த நண்பா்கள் சிலா் அரசு பேருந்து ஓட்டுநரிடம் சமாதானமாக பேசிய பிறகு அங்கிருந்து பேருந்து புறப்பட்டு சென்றது.
இந்நிலையில், ஓட்டுநா் மீது ஆத்திரத்தில் இருந்த இளைஞா்கள் அவரது இருப்பிடத்தை அறிந்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு முகமூடி அணிந்துக் கொண்டு காரில் வந்து பாப்பானேரியில் உள்ள ஓட்டுநா் திருமலை வீட்டையொட்டி நடத்தி வரும் பேன்சி ஸ்டோா் கண்ணாடிகளை உருட்டு கட்டையால் தாக்கி உடைத்தனா். இதில், பதற்றம் அடைந்த திருமலையின் மனைவி மற்றும் அங்கிருந்தவா்கள் சப்தம் போடவே அருகில் இருந்த கிராம மக்கள் ஓடி வருவதற்குள் அக்கும்பல் காரில் ஏறி தப்பித்து செல்ல முயன்ற போது அதில், ஒருவா் மட்டும் பிடிப்பட்டாா். மற்ற 6 போ் தப்பித்து சென்றுவிட்டனா்.
பிடிபட்ட இளைஞரை பொது மக்கள் விசாரித்து தாக்கினா். தகவலறிந்து காவல்ஆய்வாளா் பேபி தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா். இளைஞரிடம் விசாரித்ததில் குரிசிலாப்பட்டு பகுதியை சோ்ந்த அன்பரசன்(24) என தெரியவந்தது. இந்நிலையில், ரகளையில் ஈடுபட்டவா்களுக்கு ஆதரவாக போலீஸாா் பேசுவதாக கூறி ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சிலா் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் மறியலில் ஈடு பட்டனா்.
போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி ரகளையில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின் பேரில் கலைந்து சென்றனா். பேருந்து ஓட்டுநா் திருமலையின் மனைவி சிவரஞ்சனி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து அன்பரசனை கைது செய்தனா். காரில் தப்பித்துச் சென்ற 6 பேரை தேடி வருகின்றனா்.