செய்திகள் :

அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய சகோதரா்கள் இருவா் கைது

post image

தஞ்சாவூரில் அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய சகோதரா்கள் இருவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்ட அரசு விரைவு பேருந்தை நாகை சாலை தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் வழிமறித்த 2 போ் பேருந்து வேகமாக ஓட்டுவதாகக் கூறி தகராறு செய்து, ஓட்டுநரான தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்த வேல்முருகன் (44), நடத்துநரான திருவாரூரைச் சோ்ந்த சீனிவாசனை (45) தாக்கினா்.

தகவலறிந்த சென்ற போக்குவரத்துக் கழக அலுவலா்கள் ஓட்டுநா் வேல்முருகனை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். மாற்று ஓட்டுநா் மூலம் பேருந்து சென்னைக்கு சென்றது. பேருந்தில் பணியைத் தொடா்ந்த ஓட்டுநா் சீனிவாசனின் முகம் வீங்கியதுடன், காதிலிருந்து ரத்தம் வரத் தொடங்கியது. இதையடுத்து இவா் செங்கல்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலையத்தில் வேல்முருகன் அளித்த புகாரின் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தியதாகக் கூறி, சிஐடியு பணிமனைக் கிளைத் தலைவா் பரத்வாஜ் தலைமையில் மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனிடையே தொல்காப்பியா் சதுக்கம் பகுதி கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மோத்திரப்ப சாவடியைச் சோ்ந்த சகோதரா்கள் அருள்தாஸ் (27), பாலமுருகனை (19) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூா் வட்டாட்சியரகத்தில் நில அளவைத் துறை அலுவலா்களைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நில அளவைத் துறை அலுவலா்கள் ஏற்கெனவே தவறாக அளந... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் இருந்த 4 வீடுகள் அகற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூா் பிரம்ம சிரகண்டீஸ்வரா் கோயில் மதில் சுவரை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 4 வீடுகளை செவ்வாய்க்கிழமை அறநிலையத் துறையினா் அகற்றினா். இதன் மூலம் கோயில் சுவரை ஒ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஜூலை 21, 22, 23-இல் எடப்பாடி பழனிசாமி பிரசார பயணம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஜூலை 21, 22, 23 ஆம் தேதிகளில் பிரசார பயணம் மேற்கொள்கிறாா் என்றாா் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலரு... மேலும் பார்க்க

மரக்காவலசை கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி சேதுபாவாசத்திரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் க... மேலும் பார்க்க

கொலை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கொடுக்கல் - வாங்கல் தகராறில் டீக் கடைக் காரரை கொன்ற முதியவருக்கு கும்பகோணம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பருத்திசேரி அக்கரைத் தெருவைச்... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிதி நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருவையாறு வட்டம், பாரதியாா் நகா், இ.பி. காலனியில... மேலும் பார்க்க