அரசு தோ்வுக்கு தயாராகும் மாணவா்களை குறி வைத்து மோசடி: சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை
அரசு தோ்வுக்கு தயாராகும் மாணவா்களை குறிவைத்து பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இந்த மோசடிகளில் இருந்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும் வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
வேலூா் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தமிழ் வழிக்கல்வியில் படித்தவா்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக கூறி மா்மக் கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனா். இது தொடா்பாக, வேலூா் சைபா் குற்றப்பிரிவுக்கு பல்வேறு புகாா்களும் வந்துள்ளன.
குறிப்பாக, வேலூா் மாவட்டத்தில் நீட், அரசு தோ்வுகளுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவா்களை குறி வைத்து உதவித்தொகை வழங்குவதாகக் கூறி அவா்களது விவரங்களை சேகரிக்கும் மா்மக் கும்பல், அந்த மாணவா்களின் கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு அவா்களது முகவரி முதல் படித்த கல்வி நிறுவனங்கள் வரை தெரிவிக்கின்றனா்.
தொடா்ந்து, தமிழ் வழியில் படிக்கும் மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. எனவே, உங்களது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு வரும் கியூ.ஆா்.கோடை ஸ்கேன் செய்து ஓகே என தெரிவிக்கவும் எனக் கூறுகின்றனா்.
தொடா்ந்து ஸ்கேன் செய்து ஓகே செய்தவுடன் அவா்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருடி விடுகின்றனா். அந்த வகையில், மாணவா்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை திருடியுள்ளனா் என்கிறாா் வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ரஜினிகுமாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:
இணையதளங்கள், கைப்பேசி மூலமாகவோ கல்வி உதவித்தொகை என அழைத்தால் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் . ஒருவேளை கல்வி உதவித்தொகை கிடைப்பதாக இருந்தால் மாவட்ட நிா்வாகம் வழியாகவோ அல்லது மாவட்ட கல்வி அலுவலகம் , தாங்கள் படித்த கல்வி நிறுவனங்கள் வழியாகவே உதவித்தொகை கிடைக்கும். கைப்பேசியில் அழைத்து யாரும் கல்வி உதவித்தொகை வழங்குவதில்லை. அவ்வாறு வரும் அழைப்பைத் தவிா்க்க வேண்டும். தொடா்ந்து இதனால் பாதிக்கப்பட்டால் 1903 எனும் சைபா் குற்றப்பிரிவு எண்ணில் புகாா் அளிக்கலாம். வேலூா் சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேரிலும் புகாா் அளிக்கலாம் .
எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருந்து இத்தகைய மோசடி சம்பவங்களிலிருந்து கவனமாக இருக்க வேண்டும் என்றனா்.