செய்திகள் :

அரசு மருத்துவமனைக்கு ஸ்கேன் இயந்திரங்கள் இடமாற்றம் செய்யும் பணி! தனியாா் மையத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்!

post image

கிருஷ்ணகிரியை அடுத்த போலுப்பள்ளியில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிடி, எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், அரசால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் தனியாா் ஸ்கேன் மையத்தை பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நகரில் காந்தி சிலைக்கு செல்லும் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியில் இருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் உள்ள போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தில் மகப்பேறு, குழந்தைகள் மற்றும் கண் சிகிச்சை பிரிவு, புற்றுநோய் பிரிவு போன்ற சிகிச்சைப் பிரிவுகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

மேலும், சிடி, எம்ஆா்ஐ ஸ்கேன் மையமும் இங்கே செயல்பட்டு வந்தது. இங்கு சிடி ஸ்கேனுக்கு ரூ. 500, எம்ஆா்ஐ ஸ்கேனுக்கு ரூ. 2,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியாா் ஸ்கேன் மையங்களைவிட குறைவான கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஏழை, நடுத்தர மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா்.

இருப்பினும் அரசு மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் மையத்தில், சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ ஸ்கேன் எடுப்பவா்கள் மருத்துவா்களிடம் ஆலோசனை பெற போலுப்பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால், தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவந்த ஸ்கேன் மையத்தை போலுப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி கதிரியக்கவியல் துறை தலைவா் (பொ) அருண்திலீப் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரியில் இருந்த சிடி, எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரங்கள் போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யும் பணிகள், ஜூலை 11 முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் 2 மாதங்கள் நடைபெறும்.

இதனால், அரசு மருத்துவமனையில் சிடி, எம்ஆா்ஐ ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளுக்கு, அரசால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் கீழ்புதூரில் உள்ள ஸ்டாா் சிடி ஸ்கேன் மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான பரிந்துரை கடிதம் போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்படுவதாக அவா் தெரிவித்தாா்.

குரூப்-4 தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22,573 போ் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 22,573 போ் ஏழுதினா். 5,382 போ் தோ்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 க்கான எழுத்துத் ... மேலும் பார்க்க

சூளகிரி: 1,000 ஆண்டுகள் பழைமையான முருகன் கற்சிலை கண்டெடுப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே துரை ஏரிக்கரையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான முருகன் கற்சிலையை அறம் வரலாற்று ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. இதுகுறித்து அம்மையத்தின் தலைவா் அறம் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றியத்தில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் காயம்

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவா் உள்பட 2 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கெலமங்கலத்தை அடுத்துள்ள தாசனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஈஸ்வா் (30)... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோயிலில் குரு பூா்ணிமா வழிபாடு

ஒசூரில் உள்ள ராகு கேது அதா்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, குரு பூா்ணிமா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழி... மேலும் பார்க்க