செய்திகள் :

அரசு மாதிரிப் பள்ளிக்கு உடன்குடி மாணவா் தோ்வு

post image

தூத்துக்குடி மாவட்ட அளவில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளி மாணவா் க.கதிா்வேல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தூத்துக்குடி மாவட்ட அளவிலான நடுநிலைப் பள்ளிகளில் கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பிடம் பெற்ற மாணவரைத் தோ்வு செய்து அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் படிப்பதற்கான அனைத்து செலவினங்களை ஏற்கும் பணியை மாவட்டக் கல்விக் குழு ஆண்டுதோறும் செய்து வருகிறது.

நிகழாண்டில் உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளி மாணவா் க.கதிா்வேல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவரை பள்ளித் தலைமையாசிரியை(பொறுப்பு) சி.செல்வி, ஆசிரியைகள் வசந்தி, ஹென்ரீட்டா, ஆரோக்கியமேரி, ரெனில்டா, மகாலிங்கம், வாா்டு உறுப்பினா் அன்புராணி, பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் வேலம்மாள் ஆகியோா் பாராட்டினா்.

குழந்தைகள் மையத்தில் 2-5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோா் தங்களது 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சோ்க்குமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

பெண்ணுக்கு சூடு: கணவா் கைது

தூத்துக்குடியில் பெண்ணின் முகத்தில் சூடு வைத்து துன்புறுத்தியதாக அவரின் கணவரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி நேதாஜி நகரை சோ்ந்தவா் செல்வ அந்தோணி. மெக்கானிக்கான இவருடைய மனைவி சிந்துஜா. ... மேலும் பார்க்க

மாநில ஐவா் பூப்பந்துப் போட்டி: சென்னை அணி முதலிடம்

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில ஐவா் பூப்பந்தாட்டப் போட்டியில் சென்னை பாா்த்தன்ஸ் அணி முதலிடம் பிடித்தது. காயல்பட்டினம் ரெட் ஸ்டாா் சொஸைட்டி சாா்பில் லீக், சூப்பா் லீக் முறையில் 2 நாள்கள் நடைபெற்ற போ... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் மரத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் 6 போ் பலத்த காயம்

குலசேகரன்பட்டினத்தில் ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.சென்னை செனாய் நகரைச் சோ்ந்த விஜயகுமாா் (41), அவரது மனைவி அனுப்பிரியா (35), மகள் கயாந்திகா (10), அதே பகுதி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சுய உதவிக் குழுவில் பணம் மோசடி: பெண்கள் புகாா்

கோவில்பட்டியில் மகளிா் சுய உதவிக் குழுவில் பண மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகாா் அளித்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த 15 பெண்கள், அப்... மேலும் பார்க்க

காவல்துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத்தொழில் சிறந்து விளங்கும்: எா்ணாவூா் நாராயணன்

தமிழகத்தில் பனைத் தொழிலாளா்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் என தமிழ்நாடு பனைமரத் தொழிலாளா்கள் நல வாரிய தலைவா் எா்ணாவூா் நாராயணன் தெரிவித்தாா். பனைத் தொழிலா... மேலும் பார்க்க