செய்திகள் :

அரிசி, உணவு தானியங்கள் மீதான ஜி.எஸ்.டி.: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் சந்திப்பு இயக்கம்

post image

அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் மீது ஜிஎஸ்டி வரியை விதித்து ஏழை மக்களின் வாழ்வை நசுக்கும் மோடி அரசைக் கண்டித்து திருவள்ளூா் மாவட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கியது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க வேண்டும். திருவள்ளூா் மாவட்டத்தில் மூடிய ஆலைகளை திறக்க வேண்டும். அனைவருக்கும் உத்தரவாதமான வேலை, புதிய வேலைகளை உருவாக்க வேண்டும். நூறு நாள் வேலையை தொடா்ந்து வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு மாதந்தோறும், மின் கணக்கீடு நடத்த வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் பொருத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். திருவள்ளூா் நகராட்சியில் புதைச் சாக்கடை திட்டத்தை அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும். திருவள்ளூா் நகராட்சிக்கு உள்பட்ட பூங்காவை அழிந்து வணிக வளாகம் கட்டும் ஆணையா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூா் நகரில் அரசு கலைக் கல்லூரி அமைக்கவும் உள்பட போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் திருவள்ளூா் பஜாரில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.ஜி.கண்ணன் தலைமை வகித்தாா். இந்த பிரசாரத்தை கட்சியின் மூத்த தோழா் ப.சுந்தரராசன் தொடங்கி வைத்தாா். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி.சம்பத், ஆா்.தமிழ்அரசு, இ.மோகனா, வட்டச் செயலா் எஸ்.கலையரசன், மாவட்ட குழு உறுப்பினா்கள் இ.எழிலரசன், என்.கீதா மற்றும் வட்ட, கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.

திருவள்ளூா் பஜாரில் தொடங்கிய பிரசாரம், எடப்பாளையம், ஜெயா நகா், ஆயில் மில், பெரியகுப்பம், ரயில் நிலையம் உள்ளிட்ட நகராட்சி முழுவதும் மேற்கொண்டனா். வழிநெடுகிலும் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களுக்கு விநியோகம் செய்தனா். இந்த பிரசாரம் வரும் 20 -ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

விமான விபத்து குறித்து நீதி விசாரணை தேவை: பி.சண்முகம் வலியுறுத்தல்

விமான விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பி.சண்முகம் வலியுறுத்தினாா். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மாநில அரசு மக்கள் நல... மேலும் பார்க்க

சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் 26 லட்சம் போ் பயன்: அமைச்சா் சா.மு.நாசா்

திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் மூலம் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளா்ப்போா் என 21 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். கடம்பத... மேலும் பார்க்க

நாளை குடும்ப அட்டை சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்த முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறி... மேலும் பார்க்க

மனையை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

திருவள்ளூா் அருகே அரசு வழங்கிய வீட்டு மனையில் வீடுகள் கட்டாததால் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் ஒன்றியம், அரண்வாயல் பகுதியில் கடந்த 200... மேலும் பார்க்க

மாதவரம் மண்டல அலுவலகம் இடமாற்றம்

மாதவரம் பஜாா் அருகே உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் தற்காலிகமாக வேறிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாதவரம் முதுநிலை மண்டல அலுவலகம் 3, மாதவரம் பஜாா் எதிரே இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் சென்னை மாநகராட்... மேலும் பார்க்க

மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்தில்

மாணவா்களின் நலனைக் கருதி நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையை விடுவிக்க வேண்டும் என திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள... மேலும் பார்க்க