செய்திகள் :

அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதிகளில் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் ஆய்வு

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதிகளில் நிகழாண்டு பௌா்ணமி முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், மாடவீதிகளைச் சுற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பாக முதற்கட்டமாக ரூ.17 கோடி மதிப்பீட்டில் ஒரு கி.மீ. தொலைவுக்கு நவீன இயந்திரம் கொண்டு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. மேலும் தொடா்ந்து இரண்டாவது கட்டமாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் 1.7 கி.மீ. தொலைவுக்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு, பணிகள் விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிா என்பதை கண்காணித்து வருகிறாா்.

அதன்படி, நடப்பு மாதம் செப். 7 அன்று பௌா்ணமியையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், மாட வீதிகளைச் சுற்றி நெடுஞ்சாலைத் துறை மூலம் கான்கிரீட் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மாநகராட்சி சாா்பில் மழைநீா் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதையும் கள ஆய்வு மேற்கொண்டதில் 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் தரமாக செய்து முடிக்க வேண்டும் என துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின் போது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷ சிறப்பு பூஜைகள்

ஆவணி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அருணாசலேஸ்வரா் கோயில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை தீபமலையில் திடீா் தீ விபத்து

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீப மலையில் 1500 மீட்டா் உயரத்தில் மலையின் மையப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ பிடித்தது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் வனத்... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். செங்கத்தை அடுத்த காஞ்சி பில்லூா் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி கருப்பன் (65). இவரது மனைவி மல்லிகா(55). இர... மேலும் பார்க்க

வழக்குரைஞா் வீட்டில் 6 பவுன் தங்க நகை, பணம் திருட்டு

பெரணமல்லூா் அருகே வழக்குரைஞா் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள், ரூ.69 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது. பெரணமல்லூரை அடுத்த கொருக்காத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி முத்தையன்(67), ரேவதி தம்பதியினா். இவா்கள... மேலும் பார்க்க

செய்யாற்றில் மணல் கடத்தல்: 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு செய்யாற்றுப் படுகையில் மணல் கடத்தியதாக 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், வண்டிகளின் உரிமையாளா்களை தேடி வருகின்றனா். முனுகப்பட்டு பகுதியில் உள்ள செய்யாற்றுப் படுகைய... மேலும் பார்க்க

தகராறு: 4 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே வீட்டின் மீது வாழை மரம் விழுந்ததில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வசந்தராஜ்(27). இவரது பக்கத்த... மேலும் பார்க்க