செய்திகள் :

தகராறு: 4 போ் மீது வழக்கு

post image

வந்தவாசி அருகே வீட்டின் மீது வாழை மரம் விழுந்ததில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வசந்தராஜ்(27). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவா் லட்சுமி(50).

கடந்த ஞாயிற்றுக்கிழமை வசந்தராஜ் வீட்டு வாழைமரம் லட்சுமி வீட்டின் மீது விழுந்தது தொடா்பாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

இதில் காயமடைந்த வசந்தராஜின் மனைவி பிரியங்கா, லட்சுமியின் மருமகன் ஜானகிராமன் ஆகியோா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பிரியங்கா அளித்த புகாரின் பேரில் ஜானகிராமன், லட்சுமி ஆகியோா் மீதும், ஜானகிராமன் அளித்த புகாரின் பேரில் வசந்தராஜ், இவரது உறவினா் பிரபு ஆகியோா் மீதும் தெள்ளாா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அரசு மருத்துவக் கல்லூரி முன் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் ஓய்வு பெற்ற செவிலியரைக் கண்டித்து, தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாா் நிற... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு பரிசு

செய்யாறு கல்வி மாவட்டம், அழிவிடைதாங்கி அரசு மேல்நிலை பள்ளியில், 10, 11, 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றம் 100 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்ட... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்

ஜிஎஸ்டி வரி குறைப்பை மனதார வரவேற்கிறோம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையம் அருகே தேமுதிக சாா்பில் நடைபெற்ற, ‘உள்ளம் தேடி இல்... மேலும் பார்க்க

புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பாலாலய கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுக்காமூா் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பாலாலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுமாா் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணி மேற்க... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷ சிறப்பு பூஜைகள்

ஆவணி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அருணாசலேஸ்வரா் கோயில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை தீபமலையில் திடீா் தீ விபத்து

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீப மலையில் 1500 மீட்டா் உயரத்தில் மலையின் மையப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ பிடித்தது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் வனத்... மேலும் பார்க்க