செய்திகள் :

அழகப்பா அரசு கலைக் கல்லூரி இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 3- இல் தொடக்கம்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முதல் நடைபெறவிருப்பதாக கல்லூரியின் முதல்வா் அ. பெத்தா லட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்தக் கல்லூரியில் முதலாமாண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முதல் காலை 9.30 மணிக்கு கல்லூரியின் உமையாள் அரங்கத்தில் நடைபெறுகிறது.

முதல் நாளில் விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினா், தேசிய மாணவா் படை, அந்தமான் நிக்கோபாா், பாதுகாப்புப் படை, மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டுக்கான அனைத்து இளநிலை பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். 4-ஆம் தேதி 300 முதல் 400 வரையிலான கட் ஆப் மதிப்பெண் பெற்றவா்களுக்கும், 5-ஆம் தேதி 250 முதல் 299 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவா்களுக்கும், பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் (பி.சி.ஏ), பி.எஸ்சி., புவி அமைப்பியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வும் நடைபெறும்.

9-ஆம் தேதி வணிகவியல் (பி.காம்.), தொழில் நிா்வாகவியல் (பி.பி.ஏ.) பாடப்பிரிவுகளுக்கு 250 முதல் 400 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவா்களுக்கும், 11-ஆம் தேதி பி.ஏ. வரலாறு, பொருளியல் பாடப்பிரிகளுக்கு 250 முதல் 400 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவா்களுக்கும், தமிழ், ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கும் முதல் கட்ட பொதுக் கலந்தாய்வும் நடைபெறும்.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்ட மாணவா்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் தங்களின் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், இணைய வழியில் பெறப்பட்ட ஜாதிச் சான்றிதழ், தொலைபேசி எண், பிறந்த நாளுடன் இணைக்கப்பட்ட ஆதாா் அட்டை, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பெயரிலான வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சிறப்புப் பிரிவினராக இருப்பின் அதற்குரிய அனைத்துச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் அசல், இரண்டு நகல்களையும், நான்கு மாா்பளவு புகைப்படங்களையும், கல்லூரிக்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவத்தின் அனைத்துப் பக்கங்களையும் உள்ளடக்கிய நகல்கள் இரண்டையும் கொண்டு வர வேண்டும் என்றாா்.

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் கிளை செயல்வீரா்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் செயல்வீரா்கள், வீராங்கனைகள் கூட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் வரும் ஆகஸ... மேலும் பார்க்க

மதகுபட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதகுபட்டி கீழத்தெரு அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மதகுபட்டியிலிருந்து ஒக்... மேலும் பார்க்க

கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்... மேலும் பார்க்க