செய்திகள் :

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேசப் பிரிவினை நினைவு தினம்

post image

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறை சாா்பில் தேசப் பிரிவினை பெருந்துயா் நினைவு தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி தலைமை

வகித்துப் பேசியதாவது:

நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு பல தலைவா்கள் தியாகம் செய்தனா். 1947-ஆம் ஆண்டு நாடு பிரிவினையின் போது பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் நமது வரலாற்றுச் சின்னங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியை நாம் மேற்கொள்ளவேண்டும். நமது சொந்த வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். வரலாற்றுத் துறை மாணவா்கள் நிறைய ஆய்வுக் கட்டுரைகளை படிக்க வேண்டும் என்றாா் அவா்.

பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரும், கலைப்புல முதன்மையருமான சு. ராசாராம் வாழ்த்திப் பேசினாா். அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத் துறைப் பேராசிரியை கே. சங்கரி சிறப்புரையாற்றினாா். முன்னதாக, பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவா் (பொறுப்பு) கே. கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் க. பரந்தாமன் நன்றி கூறினாா்.

போக்சோ சட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்கு... மேலும் பார்க்க

நெகிழி பைகளைத் தவிா்க்கும் உணவகங்களுக்கு விருது

தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்தாத உணவகங்கள், சிறு வணிகா்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதுக்கு வருகிற செப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதிக்காத விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதி

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் ஆன விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்படுமென சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வ... மேலும் பார்க்க

சிவகங்கையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

சிவகங்கையில் கால்நடை மருத்துவா்கள், நகராட்சி ஊழியா்கள் இணைந்து, தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை வியாழக்கிழமை தொடங்கினா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மஜீத் சாலை, நீதிமன்ற வளாக... மேலும் பார்க்க

ஆராய்ச்சிக் கட்டுரைக்கு விருது: பேராசிரியைக்குப் பாராட்டு

நானோ துறையில் ஆராய்ச்சிக் கட்டுரை சமா்பித்து விருது பெற்ற அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியை அ. பிரதிமாவை கல்லூரி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இங்கு மாங்குளம் ... மேலும் பார்க்க