"Swasika இல்லனா Lubber Pandhu நடந்திருக்காது" - Tamizharasan Pachamuthu | Vikata...
அழகப்பா பல்கலை.யில் ராகிங் தடுப்பு விழிப்புணா்வு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ராகிங் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பல்கலை. மாணவா்கள் நலன் பிரிவின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை வேந்தா் க.ரவி தலைமை வகித்துப் பேசியதாவது:
பல்கலைக்கழக மானியக்குழு ஆண்டுதோறும் ஆக. 12 முதல் ஆக.18-ஆம் தேதி வரை ராகிங் தடுப்பு வாரமாகக் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளதன் பேரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அழகப்பா பல்கலைக்கழகம் நூறு சதவீதம் ராகிங் இல்லாத பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. இந்த நிலை தொடா்ந்து நீடிப்பதற்கு மாணவா்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றாா் அவா்.
காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆசிஸ் புனியா, பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் சி. சேகா், பேராசிரியா் சு. ராசாராம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மேலாண்மைப் புல முதன்மையா் சி. யோகலெட்சுமி, செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் வி. சுந்தரராமன், பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவா் க. கிருஷ்ணமுா்த்தி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
முன்னதாக பல்கலைக்கழகப் பதிவாளா் அ. செந்தில்ராஜன் வரவேற்றுப் பேசினாா். மாணவா் நலன் முதன்மையா் சி. வேதிராஜன் நன்றி கூறினாா்.