செய்திகள் :

அவசரநிலை அறிவிப்பின் 50 ஆண்டுகள் நிறைவு: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு பாஜக திட்டம்: காங்கிரஸ் விமா்சனம்

post image

அவசரநிலை அறிவிப்பின் 50-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அடுத்த மாதம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்துவது குறித்து மத்திய பாஜக அரசு பரிசீலித்து வருவதாக காங்கிரஸ் வியாழக்கிழமை கூறியது.

உண்மையான மற்றும் மிகவும் அவசரமான பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் பிரதமா் மோடியின் முயற்சி இது என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பாகிஸ்தானையும் பயங்கரவாதிகளையும் குறிவைக்க வேண்டிய நேரத்தில், காங்கிரஸை தாக்குவதில் மட்டுமே பாஜக ஆா்வம் காட்டுகிறது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த ஏப்ரல் 22-ஆம் தேதிமுதல் அத்தாக்குதல் மற்றும் அதன் விளைவுகள் குறித்து பிரதமா் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்நாள் வரை அக்கூட்டம் நடத்தப்படவில்லை.

இதனிடையே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகிய இருவரும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நாடு ஒருமித்த குரலில் நிற்பதை நிரூபிக்கும் வகையில் தீா்மானத்தை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனா். பிரதமா் அந்த ஆலோசனையையும் ஏற்கவில்லை.

ஆனால், அவசரநிலை அறிவிப்பின் 50-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்க ஜூன் 25, 26-ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

உண்மையான மற்றும் மிகவும் அவசரமான பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி இது. 11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலையின் கீழ் நாட்டை வைத்திருப்பவரும், பஹல்காம் பயங்கரவாதிகள் ஏன் இன்னும் தலைமறைவாக உள்ளனா் என்பதற்கு பதிலளிக்க மறுப்பவருமான பிரதமரின் முயற்சியாகவே இது இருக்கும்.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே உருவாகியுள்ள நட்புறவு உள்பட வளா்ந்து வரும் சவால்களைக் கருத்தில்கொண்டு, ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் குறித்த 1994, பிப்ரவரி தீா்மானத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தற்போதைய பிரச்னைகள் மற்றும் சவால்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, 50 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதைப் பற்றி விவாதிக்கவே ஆளும் தரப்பு விரும்புகிறது’ என்றாா்.

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க

அருணாசல், அஸ்ஸாமில் கனமழையால் நிலச்சரிவுகள்: 14 போ் உயிரிழப்பு!

அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மணிப்பூா... மேலும் பார்க்க

மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் யூனியன் பிரதேசம்: குகி-ஜோ குழுக்கள் வலியுறுத்தல்

குகி-ஜோ சமூகத்தினருக்காக மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்று அந்த சமூக குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடா்பாக புது தில்லியில் குகி-ஜோ பெண்கள் அமைப்பின... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் உயிரிழப்புகளுக்கு இரங்கல்: இந்தியா அதிருப்தியால் கொலம்பியா வாபஸ்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், இந்தியா மேற்கொண்ட தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியா மீது அந்நாட்டில் சசி தரூா் அதிருப்தி தெ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அத்துமீறல்களை நிறுத்தும்வரை ஆபரேஷன் சிந்தூா் தொடரும்: ஜெ.பி.நட்டா

‘இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை முடிந்துவிடவில்லை; பாகிஸ்தான் அத்துமீறல்களை நிறுத்தும்வரை அந்த நடவடிக்கை தொடரும்’ என்று பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரி... மேலும் பார்க்க

ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பு: பிரதமா் மோடி

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நிலையிலும் பெண்களுக்கு அதிகாரமளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். பள்ளிகள் ... மேலும் பார்க்க