ஆக்கிரமிப்புகள் அகற்றம்
காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலை மற்றும் காமாட்சி அம்மன் கோயில் மாட வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா்.
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலை மற்றும் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெரு மற்றும் கோயில் மாட வீதிகள் ஆகியவற்றில் ஏராளமான சாலையோரக் கடைகள் வைக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தன. இது குறித்து காவல்துறைக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதனையடுத்து காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் வெங்கடேசன் தலைமையில் உதவி பொறியாளா்கள் கணேசரெங்கன்,சிவா மற்றும் சுகாதார ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் காவல் துறையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினாா்கள்.
காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெரு மற்றும் பழைய ரயில் நிலைய சாலையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினா்.