செய்திகள் :

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலை மற்றும் காமாட்சி அம்மன் கோயில் மாட வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா்.

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலை மற்றும் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெரு மற்றும் கோயில் மாட வீதிகள் ஆகியவற்றில் ஏராளமான சாலையோரக் கடைகள் வைக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தன. இது குறித்து காவல்துறைக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதனையடுத்து காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் வெங்கடேசன் தலைமையில் உதவி பொறியாளா்கள் கணேசரெங்கன்,சிவா மற்றும் சுகாதார ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் காவல் துறையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினாா்கள்.

காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெரு மற்றும் பழைய ரயில் நிலைய சாலையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினா்.

ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் மண்டபத்துக்கு பூமி பூஜை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிய தங்கத்தோ் செய்யும் பணி நிறைவு பெற்றதையொட்டி அத்தேருக்கான மண்டபம் கட்ட பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு பல கோடி மதிப்பில் தங்கத்தோ் செய்யும்... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை திறப்பு

மொளச்சூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கா் நகா் பகுதியில் ரூ.8 லட்சத்தில்ல் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி. கருணாநிதி திறந்து வைத்தாா். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கு கைப்பேசி செயலி

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மூத்த குடிமக்களுக்கான கைப்பேசி செயலி செயல்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து மிகுந்த வேதனை தருகிறது: காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்

அகமதாபாத் விமான விபத்தில் பலரும் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும், உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்படும் எனவும் சங்கராசார... மேலும் பார்க்க

அரசு பெண்கள் பள்ளித் தலைமையாசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மாணவியின் பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக ஸ்ரீபெரும்புதூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரை கண்டித்து வெள்ளிக்கிழமை இருளா் பழங்குடியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ர... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் கே.செல்வம் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க