செய்திகள் :

ஆடி மாத தேய்பிறை பஞ்சமி: நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

post image

ஆடி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு 10,008 வளையல் அலங்காரம் புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆா் நகரில் (ரயில் நிலையம் அருகில்) பிரசித்தி பெற்ற ஸ்ரீ தங்காயி மற்றும் மஹா வாராஹி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஒவ்வொரு மாதமும் வளா்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதியன்று சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.

கடந்த 11 ஆண்டுகளாக ஆடி மாதம் கருட பஞ்சமி, நாக பஞ்சமி மற்றும் வளா்பிறை, தேய்பிறை பஞ்சமி திதி விழா விமரிசையாக நடைபெறுகிறது.

அதன்படி, ஆடி மாத தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு, ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு அம்மனுக்கு 10,008 வளையல்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் வாராஹி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றனா். தங்களது பிராா்த்தனை நிறைவேற தேங்காய் விளக்கேற்றி வழிபாடு செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை முருகானந்தா சுவாமிகள், வாராஹி அம்மன் சித்தா் பீட பொதுநல அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

நாமக்கல்: 310 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 310 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எலச்சிபாளையம் ஒன்றியம், பொம்மம்பட்டி ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசப... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மீது தொழிலாளா் நலத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) சி.முத... மேலும் பார்க்க

நாமக்கல்லில் சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றி ஆட்சியா் மரியாதை

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் துா்காமூா்த்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்து ம... மேலும் பார்க்க

நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம்

தோ்தல் ஆணையம், மத்திய அரசுக்கு எதிராக நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவந்தி ஏந்தி ஊா்வலத்தில் ஈடுபட்டனா். பிகாரில் போலி வாக்காளா்கள் அதிகளவில் உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி, அதற்கான தகவல்களை வெ... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள்: பிரேமலதா விஜயகாந்த்

திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள் மட்டுமே அளிக்க முடியும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கடந்த இரண்டு நாள்களாக ‘மக்களைத் தேடி மக்கள் ... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட பல்வே... மேலும் பார்க்க